பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இதுவரை இலங்கைக்கு சுமார் 675,000 பவுண்ட் மனிதாபிமான உதவி பிரித்தானியாவால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானிய அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் மேலும் நிவாரணம் வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பல சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.