இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு அமைப்பு

இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துடனான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசின் நிதி மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஜப்பான் கடலோரப் பாதுகாப்புப் படையின் விசேட நிபுணத்துவ ஒத்துழைப்பின் கீழ் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் “இந்து – பசுபிக் வலயத்தின் சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் சமுத்திர சட்டம் ஒழுங்குகளைப் பலப்படுத்தல்” எனும் கருத்திட்டம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படைக்கு ‘Congnyte S12’ செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு மோசமான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், இல்லாதொழித்தல் மற்றும் அவ்வாறான செயல்களுக்கு குறுக்கறுத்தல் மூலம் இலங்கை கடற்படையின் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், அதன்மூலம் பிராந்திய ரீதியாகவும் மற்றும் சர்வதேச சமுத்திரப் பாதுகாப்புத் தொடக்க முயற்சிகளுக்காக இலங்கையின் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்த முடியும்.

குறித்த கட்டமைப்பை எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த