இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் – பிரிட்டனில் கலந்துரையாடல்

தமிழர்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் வென்றெடுக்க உழைப்போம் – தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு உறுதி

தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டினை அக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் இந்த ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அதன்படி இக்கூட்டத்தில் தமிழர்களுக்கான பிரிட்டனின் அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவராக டேம் சியோபைன் மெக்டொனாக் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.

அதேபோன்று பிரதித் தலைவர்களாக உமா குமாரன், பொபி டீன், லூயி பிரென்ஞ் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதேவேளை இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது இலங்கைத் தமிழர்களுக்கான பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நிலையான சமாதானம் என்பன உள்ளடங்கலாக கரிசனைக்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மரபணு பரிசோதனைக்கான (டி.என்.ஏ) தரவு வங்கி உருவாக்கல் திட்டம், சர்வதேச நீதிமன்றம் அல்லது ஏனைய சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைகளை நாடுவதற்கான வழிமுறைகள், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கததின் அரசியல் போக்குகள் மற்றும் இன்னமும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் வலுப்படுத்தல், இந்தியாவில் இடம்பெற்றுவரும் தெளிவூட்டல் முயற்சிகள், வடக்கு – கிழக்கு மக்களுக்கான இழப்பீடு, மீள்குடியேற்றம், மீளக்கட்டியெழுப்பல் என்பவற்றை இலக்காகக்கொண்ட நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைந்துகொள்வதிலும், மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும், நிலையான அமைதி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டினை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்றக்குழுவின் உறுப்பினர்கள் மீளுறுதிப்படுத்தினர்.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு