இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு தடுப்பூசி காரணமா?

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தௌிவுபடுத்தப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுத் தனியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களின் மரணப் பரிசோதனை மாதிரிகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, குறித்த நோயாளிகள் உயிரிழப்பதற்கு முன்னரே ‘ஒண்டான்செட்ரான்’ தடுப்பூசியின் 4 தொகுதிகளை (Batches) வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் இந்த மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அந்த மருந்தின் ஏனைய அனைத்து தொகுதிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

மேலும், குறித்த உற்பத்தி நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏனைய 10 மருந்து வகைகளையும் தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மருந்து இறக்குமதி தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி மனுஜ் சி. வீரசிங்க, மருந்து இறக்குமதியானது அமைச்சர்களாலோ அல்லது அரசாங்கத்தாலோ தீர்மானிக்கப்படும் செயல்முறை அல்ல என்பதைத் தௌிவுபடுத்தினார்.

“மருந்து இறக்குமதி என்பது அமைச்சர்கள் அல்லது அரசாங்கங்களின் விருப்பப்படி நடப்பதில்லை. சுகாதார அமைச்சின் வருடாந்தத் தேவைக்கமைய டெண்டர் கோரப்பட்டு, கொள்முதல் குழுக்களின் ஊடாகவே இந்தச் செயல்முறை முன்னெடுக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான மருந்துகள் தேவை எனில், அதற்கான டெண்டர் 2024 இல் கோரப்படும். ஒரு ஓடர் வழங்கி மருந்து நாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 11 மாதங்கள் வரை எடுக்கும்.

மருந்துகளை நினைத்த நேரத்தில் கடையில் வாங்குவது போல் வாங்க முடியாது. அவற்றை உற்பத்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும். இந்த நடைமுறை கடந்த காலத்திலும் இப்படியே இருந்தது, இப்பொழுதும் இப்படியே தொடர்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

2

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் காலமானார்கள்

December 18, 2025

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி(Janak Mahendra Adikari) மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப்

old pa

யாழ்.பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை!

December 18, 2025

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

eur

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி உயர்வு

December 18, 2025

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவி, 2.35 மில்லியன் யூரோ வரை

ba

கனடாவின் அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உட்புறக் கட்டுப்பாட்டு குறித்து விசாரணை

December 18, 2025

கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடி முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force

sure

மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

December 18, 2025

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும்

arrest

இலஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது

December 18, 2025

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப்

g

இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு தடுப்பூசி காரணமா?

December 18, 2025

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது

kan

கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேகநபருக்கு பிணை

December 18, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ்.

mu

இந்தியா தென்னாப்பிரிக்க 4-வது டி-20 போட்டி இரத்து

December 18, 2025

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில்

ind

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திரா ரேடேர்ஸ் நன்கொடை

December 18, 2025

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd

Ela

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவு

December 18, 2025

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது.

ra

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

December 18, 2025

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை