இயலாமையுள்ள நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மீளாய்வு செய்ய வேண்டும்!

விசேட தேவையுடையோருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

இயலாமையுள்ள நபர்களை உள்ளடக்கிய சேவை வழங்கலை மேம்படுத்துவது தொடர்பான மாவட்ட மட்டக் கலந்துரையாடல் இன்று (27) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர்,

இயலாமையுள்ள நபர்கள் தொடர்பாக பாராளுமன்ற ஒன்றியம் முன்னெடுத்து வரும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை வரவேற்கின்றேன். நாடு முழுவதும், கிராமந்தோறும் உள்ள விசேட தேவையுடையோரின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் திறன் இவ்வொன்றியத்துக்கு உள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு கடந்த காலத்தை விட தற்போது அதிகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. இது வரவேற்கத்தக்கது. எனினும், இலங்கை இறக்குமதிகளை அதிகம் சார்ந்த நாடாக இருப்பதாலும், தற்போதைய பணவீக்கம் காரணமாக வழங்கப்படும் தொகை அவர்களுக்கு போதுமானதா என்பதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,235 விசேட தேவையுடையோர் உள்ளதாகவும், அதில் 8,712 பேர் தற்போது கொடுப்பனவு பெறுகின்றனர் என்றும், மீதமுள்ளவர்களில் 152 பேருக்கு கொடுப்பனவு பெற தகுதி உள்ளதாக மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சுமார் 1,258 விசேட தேவையுடையோர் உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால், இங்கு 930 பேருக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. மீதமுள்ளவர்கள் உண்மையில் தகுதியற்றவர்களா என்பதை மீளாய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற நிலைமை மாவட்டத்தின் பிற பிரதேசங்களிலும் இருக்கக்கூடும்.

எனவே, அனைத்து விவரங்களையும் முழுமையாக மீளாய்வு செய்து, தகுதியுள்ள அனைவருக்கும் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தற்போது ரூபாய் 10,000 ஆக வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழிவு செய்து, அதற்கான அழுத்தத்தை சம்பந்தப்பட்ட தரப்புகள் வழங்க வேண்டும்.

அதேவேளை, சிலர் கொடுப்பனவை பெறுவதற்காக அதிக கட்டணம் செலுத்தி முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, இக்கொடுப்பனவை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து செயற்படும் நடைமுறையை அறிமுகப்படுத்த பாராளுமன்ற ஒன்றியம் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் இயலாமையுள்ள நபர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா, பிரதித் தலைவர் ப. சத்தியலிங்கம், உறுப்பினர் இ. சிறிநாத், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட தேவையுடையோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு

mahm

அஹ்மதிநிஜாத் படுகொலை; இலங்கையின் உற்ற நண்பரை இழந்து விட்டோம் – நாமல் ராஜபக்ச இரங்கல்

March 3, 2026

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது ஆழ்ந்த இரங்கலைத்

thul

துலீப் மெண்டிஸ் பதவி விலகல்

March 3, 2026

கடந்த 14 ஆண்டுகளாக ஓமான் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றி, அந்த அணியை சர்வதேச மட்டத்தில்

n

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு பிரதம நீதியரசர் விஜயம்

March 3, 2026

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அவரோடு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா,

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு