இன்று பட்டிப் பொங்கல்!

பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாட்டுப் பொங்கல் இன்றாகும்.

இயற்கையை வழிபட்ட பிறகு மாடுகளை வழிபட்டு, அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

இந்த நாளில் இந்த ஆண்டு என்ன சிறப்பு உள்ளது, எந்த நேரத்தில் மாட்டுக்கு பொங்கல் வைத்து, வழிபாடு நடத்த வேண்டும், மாட்டுப் பொங்கல் அன்று எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளில் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கலாகும்.

வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை வெளியேற்றும் போகி பண்டிகையுடன் துவங்கும் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளும், முக்கிய நாளுமான தைத் திருநாளன்று விவசாயத்திற்கு அருள் செய்யும் சூரிய பகவானை வழிபட வேண்டும்.

அதைத் தொடர்ந்து மூன்றாவது நாளில் உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்துவதே மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் இன்று (16) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து, அதன் கொம்புகளுக்கு அழகாக வண்ணம் தீட்டி, மாலைகள் அணிவித்து, மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, அங்கு பொங்கலிடுவார்கள்.

பொங்கல், சுண்டல், பழங்கள் போன்றவற்றை மாட்டிற்கு படைத்து, வழிபடுவார்கள்.

மாட்டிற்கு சர்க்கரை பொங்கலுடன், வெல்லம் கலந்த அரிசி, வாழைப்பழம் ஆகியவை சாப்பிடக் கொடுப்பது நல்லது.

மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் :

காலை 09.10 மணி முதல் 10.20 மணி வரை

பகல் 12 மணி முதல் 01.30 மணி வரை

மாலை 6 மணிக்கு மேல்

வீட்டில் மாடு இல்லாதவர்களும், மாடு இருப்பவர்களும் இந்த நாளில் வீட்டில் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு.

இந்த நாளில் முன்னோர்களுக்கு வேட்டி, புடவை, துண்டு ஆகியவை வாங்கி வைத்து, பலவிதமான காய்கறிகள் கலந்து சமைத்தோ அல்லது முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்தோ வழிபடலாம்.

முன்னோர்களுக்கு படைத்த உடைகளை யாருக்காவது தானமாக அளிக்கலாம். இந்த நாளில் யாராவது இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்குவது மிகப் பெரிய புண்ணிய பலனையும், லட்சுமி கடாட்சத்தையும் தரும்.

அருகில் உள்ள கோ சாலைக்கு சென்று அங்குள்ள மாடுகளுக்கு கீரை, புல் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுப்பதும் நல்லது.

மாலையில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று நந்தி தேவரை வழிபடுவது சிறப்பு.

நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி, விளக்கேற்றி வழிபடலாம். நந்தி பகவானுக்குரிய மந்திரங்கள், நந்தி பகவான் 108 போற்றி துதிகளை சொல்லி வழிபடலாம்.

இதனால் நந்தியின் அருளும், சிவ பெருமானின் அருளும் கிடைக்கும். இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலான இன்று, பிரதோஷமும் இணைந்து வருகிறது.

இது கூடுதல் சிறப்பானதாகும். சிவ வழிபாட்டிற்கும், நந்தி வழிபாட்டிற்கும் உரிய பிரதோஷம் விரதம், மாட்டுப் பொங்கல் தினத்திலும், சுக்கிரன் மற்றும் மகாலட்சுமிக்கு உரிய வெள்ளிக்கிழமையிலும் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும்.

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.