இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை (01) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இந்நாட்டில் இஸ்லாம் மதம் பெரும்பான்மையாக இருந்து நாமல் ராஜபக்ஷவின் பெயர் நாமா ஸ்மித் என்று இருந்திருந்தால் அவர் இஸ்லாம் மதத்தைப் பாதுகாக்க நாம் அணிதிரள வேண்டும் என்றுதான் சொல்லியிருப்பார்.

அதேபோல், இந்நாட்டில் இந்து மதம் பெரும்பான்மையாக இருந்து அவரது பெயர் நாமலிங்கம் என்று இருந்திருந்தால் இந்து மதத்திற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன் என்றுதான் சொல்லியிருப்பார். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இவர்கள் ஆடும் ஒரு திட்டமிட்ட விளையாட்டே தவிர வேறொன்றுமில்லை.

இவர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இனவாதத் தீயைப் பற்றவைக்கிறார்கள். யாழ் நூலகத்தை எரித்தார்கள் அது ஓய்ந்ததும் அளுத்கம தர்கா நகரை எரித்தார்கள்.

இப்போது எரிக்க அடுத்த இடத்தைத் தேடுகிறார்கள். இந்தத் தீயில் கருகிப் போவது சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையே தவிர ஆட்சியாளர்களின் வாழ்க்கை அல்ல.

இது அவர்களுக்கு ஒரு சாதாரண அரசியல் தீர்மானம் ஆனால் பொதுமக்களாகிய நமக்கு இது நம் பிள்ளைகளையும் உறவுகளையும் இழக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாகும்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பியானோ வாசிப்பதும் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு மூன்று சிங்களச் சொற்களைச் சொல்வதும் மட்டும்தான் செய்துகொண்டு இருக்கிறார்.

கடந்த காலங்களில் நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் எதைக் குறித்து அவர் பேசியிருக்கிறார்? சஜித் மற்றும் ராஜபக்சக்கள் தலைமையிலான இந்தத் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளால் நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியாது.

2019-இல் ஒரு ஹிட்லர் போன்ற ஆட்சியை உருவாக்க முற்பட்டபோது அது நாட்டுக்குப் பேரிடியாக அமையும் என நாம் எச்சரித்தோம். இன்று விவசாய மக்கள் அந்தப் பாதிப்பை அனுபவிக்கிறார்கள்.

இனிவரும் ஆண்டுகளில் நாட்டில் உருவாகும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப எமது கட்சித் தோழர்கள் தயாராக வேண்டும். கட்சிக்குள் இடதுசாரிச் சிந்தனையுள்ள புத்திஜீவிகளையும் வல்லுநர்களையும் நாம் உருவாக்க வேண்டும்.

தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார்.

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி