இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் வரட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், பதுளை, காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பனிமூட்டம் காரணமாக வீதித் தெரிவுத்திறன் குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை வேளையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.