இந்திய கடற்றொழிலாளர்களால் பலாலி மீனவர் கைதான விவகாரத்தில் குழப்பநிலை?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய கடற்றொழிலாளர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட விவகாரம் அண்மையில் பேசு பொருளாக இருந்தது.

அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தம்மை திட்டம் இட்டே கடல் கொள்ளையர் என கைது செய்ததாகவும் தாம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது இல்லை எனவும் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் எம்மை பற்றி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என அடையாள படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபர்கள் தம்மில் உள்ள தனிப்பட்ட பகை நோக்கின் அடிப்படையிலே அவ்வாறு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பலாலி பொலிசார் தமது விருப்பம் இன்றி முறைப்பாடுகளை தள்ளுபடி செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர்.

மற்றும் இந்த அவமானம் காரணமாக தமது பிள்ளைகள் பாடசாலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வெளி இடம் செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனால் தாம் பல சமூக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை தொடர்பாக பலாலி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக சங்க உறுப்பினர்களிடம் இருந்து சிலர் கைது நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இந்திய கடற்றொழிலாளர்களால் கைது செய்யப்பட்டு தாக்கபட்ட நபர்கள் தமது மக்களுக்கு கடல் தொழிலுக்கு போன போது இந்திய கடற்றொழிலாளர்களை கண்டு சாப்பாடு கேட்க போனதாகவும் அப்போது அவர்கள் கைது செய்து தாக்கபட்டதாகவும் கூறும் தகவல் போலியானது மற்றும் 2016 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மீள குடி பெயந்த பின்னிருந்து சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

மற்றும் இவை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்ட குழுவினர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் செய்து வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட நபர்கள் குறித்த களவு செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த போது கடல் தொழிலாளர் சங்கத்தினர் இவர்களை கையுடன் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் இவ்வாறான குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எனவும் தற்போது அவர்கள் தூண்டில் எனும் கடல் தொழிலுக்கு சென்றதாக கூறுகின்றனர் ஆனால் அவர்கள் குறித்த தொழிலுக்கு சென்றததுக்கு எந்த ஆதாரமும் தப்பி வந்த கடற்றொழிலாளர்களின் படகில் இல்லை என்றும் எமது மக்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட பகையும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.

மற்றும் அவர்கள் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதால் தான் அவர்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர் அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்

spo

மெய்வல்லுநர் தெரிவுக்குழு இராஜினாமா!

July 28, 2026

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, அவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக

YQIVVADQMVALHP6FFWJKTJMBMI

அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் பயணித்த வாகனம் 140 கி.மீ வேகத்தைத் தொட்டதால் பொலிஸார் துரத்துவதைக் கைவிட்டனர்

July 28, 2026

திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேகநபரின் வாகனத்தைப் பொலிஸார் டான் வேலி பார்க்வேயில்

Arrest

தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

July 28, 2026

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை,

rain cana

ஜி.டி.ஏ (GTA) பகுதியில் 50 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம்

July 28, 2026

டொராண்டோ நகரில் இன்று இரவு கனமழையும் இடியுடன் கூடிய புயலும் வீசக்கூடும் என்பதால், ‘டொராண்டோ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அதிகாரசபை’

namal

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சி – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

July 27, 2026

ராஜபக்ஷர்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் தார்மீக