இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றுள்​ளது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட தொடரில் ஆஸ்​திரேலிய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 5 சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது ஒரு​நாள் போட்டி பெர்த் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்​திய அணி முதலில் விளை​யாடி 26 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 136 ரன்​கள் எடுத்​தது. மழை​யின் காரண​மாக ஆட்​டம் 26 ஓவர்​களாகக் குறைக்​கப்​பட்​டது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ரோஹித் சர்​மா​வும், ஷுப்​மன் கில்​லும் களமிறங்​கினர்.

சுமார் 7 மாதங்​களுக்​குப் பிறகு ஒரு​நாள் போட்​டி​யில் களமிறங்​கிய முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்​மா, ரசிகர்​களை ஏமாற்​றி​னார். 14 பந்​துகளில் ஒரு பவுண்​டரி​யுடன் 8 ரன்​கள் சேர்த்த நிலை​யில் அவர் வீழ்ந்​தார்.

ஹேசில்​வுட் பந்​து​வீச்​சில், மேட் ரென்​ஷா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் விளை​யாட வந்த விராட் கோலி​யும் ரன் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து ரசிகர்​களை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கி​னார். 8 பந்​துகளைச் சந்​தித்த அவர், மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் கூப்​பர் கானொலி​யிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில்​லுடன், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்​தார். இந்த ஜோடி​யும் நீண்ட நேரம் நிலைக்​க​வில்​லை. நிதான​மாக ஆடிக்​கொண்​டிருந்த கேப்​டன் கில்​லை, நேதன் எல்​லிஸ் ஆட்​ட​மிழக்​கச்​ செய்​தார். 18 பந்​துகளில் 2 பவுண்​டரி​களு​டன் அவர் 10 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தார்.

ரன்​கள் சேர்க்க முற்​பட்ட ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்​துகளில 11 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்​.​ராகுலும், அக்​சர் படேலும் ஸ்கோரை உயர்த்த முயன்​றனர். அக்​சர் 38 பந்​துகளில் 31 ரன்​கள் சேர்த்த நிலை​யில், குனேமன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். கே.எல்​.​ராகுல் மட்​டும் சற்று அதிரடி​யாக விளை​யாடி 31 பந்​துகளில் 2 சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்​தார்.

பின்​னர் வந்​தவர்​களில் வாஷிங்​டன் சுந்​தர் 10, ஹர்​ஷித் ராணா ஒரு ரன்​கள் எடுத்​தனர். கடைசி நேரத்​தில் அதிரடி​யாக விளை​யாடிய நித்​திஷ் ரெட்டி 11 பந்​துகளில் 19 ரன்​கள் (2 சிக்​ஸர்​கள்) எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

மழை​யின் குறுக்​கீடு காரண​மாக ஆடு​களம் இந்​திய வீரர்​களுக்கு ஒத்​துழைக்​க​வில்​லை. ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஓவன், குனேமன், ஹேசில்​வுட் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை எடுத்​தனர். நேதன் எல்​லிஸ், மிட்​செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். மழை​யின் குறுக்​கீடு காரண​மாக டிஎல்​எஸ் முறைப்​படி ஆஸ்​திரேலி​யா​வுக்கு வெற்றி இலக்கு 26 ஓவர்​களில் 131 ரன்​கள் என்று நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

தொடக்க ஆட்​டக்​காரர்​களாக மிட்​செல் மார்​ஷும், டிரா​விஸ் ஹெட்​டும் களமிறங்​கினர். அதிரடி​யாக விளை​யாட முற்​பட்ட டிரா​விஸ் ஹெட் 8 ரன்​களில், அர்​ஷ்தீப் பந்​தில் ஹர்​ஷித் ராணா​விடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார். இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த மேத்யூ ஷார்ட் 17 பந்​துகளில் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் அக்​சர் பந்​தில் ரோஹித்​திடம் பிடி​கொடுத்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் மார்​ஷும், ஜோஷ் பிலிப்​பும் சிறப்​பாக விளை​யாடி அணியின் ஸ்கோரை வெகு​வாக உயர்த்​தினர். அணி​யின் ஸ்கோர் 99-ஆக இருந்​த​போது பிலிப், வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில் வீழ்ந்​தார்.

பின்​னர் வந்த மேட் ரென்​ஷா​வும், மார்​ஷும் நிதானத்​துடன் விளை​யாடி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினர்.

21.1 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 131 ரன்​கள் எடுத்து ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றது. மிட்​செல் மார்ஷ் 46 ரன்​களும், மேட் ரென்ஷா 21 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

HinduTmail

 

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்