இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றுள்​ளது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட தொடரில் ஆஸ்​திரேலிய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 5 சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது ஒரு​நாள் போட்டி பெர்த் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்​திய அணி முதலில் விளை​யாடி 26 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 136 ரன்​கள் எடுத்​தது. மழை​யின் காரண​மாக ஆட்​டம் 26 ஓவர்​களாகக் குறைக்​கப்​பட்​டது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ரோஹித் சர்​மா​வும், ஷுப்​மன் கில்​லும் களமிறங்​கினர்.

சுமார் 7 மாதங்​களுக்​குப் பிறகு ஒரு​நாள் போட்​டி​யில் களமிறங்​கிய முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்​மா, ரசிகர்​களை ஏமாற்​றி​னார். 14 பந்​துகளில் ஒரு பவுண்​டரி​யுடன் 8 ரன்​கள் சேர்த்த நிலை​யில் அவர் வீழ்ந்​தார்.

ஹேசில்​வுட் பந்​து​வீச்​சில், மேட் ரென்​ஷா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதன் பின்​னர் விளை​யாட வந்த விராட் கோலி​யும் ரன் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து ரசிகர்​களை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கி​னார். 8 பந்​துகளைச் சந்​தித்த அவர், மிட்​செல் ஸ்டார்க் பந்​தில் கூப்​பர் கானொலி​யிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில்​லுடன், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்​தார். இந்த ஜோடி​யும் நீண்ட நேரம் நிலைக்​க​வில்​லை. நிதான​மாக ஆடிக்​கொண்​டிருந்த கேப்​டன் கில்​லை, நேதன் எல்​லிஸ் ஆட்​ட​மிழக்​கச்​ செய்​தார். 18 பந்​துகளில் 2 பவுண்​டரி​களு​டன் அவர் 10 ரன்​கள் மட்​டுமே சேர்த்​தார்.

ரன்​கள் சேர்க்க முற்​பட்ட ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்​துகளில 11 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்​.​ராகுலும், அக்​சர் படேலும் ஸ்கோரை உயர்த்த முயன்​றனர். அக்​சர் 38 பந்​துகளில் 31 ரன்​கள் சேர்த்த நிலை​யில், குனேமன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். கே.எல்​.​ராகுல் மட்​டும் சற்று அதிரடி​யாக விளை​யாடி 31 பந்​துகளில் 2 சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​கள் எடுத்​தார்.

பின்​னர் வந்​தவர்​களில் வாஷிங்​டன் சுந்​தர் 10, ஹர்​ஷித் ராணா ஒரு ரன்​கள் எடுத்​தனர். கடைசி நேரத்​தில் அதிரடி​யாக விளை​யாடிய நித்​திஷ் ரெட்டி 11 பந்​துகளில் 19 ரன்​கள் (2 சிக்​ஸர்​கள்) எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

மழை​யின் குறுக்​கீடு காரண​மாக ஆடு​களம் இந்​திய வீரர்​களுக்கு ஒத்​துழைக்​க​வில்​லை. ஆஸ்​திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஓவன், குனேமன், ஹேசில்​வுட் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை எடுத்​தனர். நேதன் எல்​லிஸ், மிட்​செல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைக் கைப்​பற்​றினர். மழை​யின் குறுக்​கீடு காரண​மாக டிஎல்​எஸ் முறைப்​படி ஆஸ்​திரேலி​யா​வுக்கு வெற்றி இலக்கு 26 ஓவர்​களில் 131 ரன்​கள் என்று நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

தொடக்க ஆட்​டக்​காரர்​களாக மிட்​செல் மார்​ஷும், டிரா​விஸ் ஹெட்​டும் களமிறங்​கினர். அதிரடி​யாக விளை​யாட முற்​பட்ட டிரா​விஸ் ஹெட் 8 ரன்​களில், அர்​ஷ்தீப் பந்​தில் ஹர்​ஷித் ராணா​விடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்​தார். இதைத் தொடர்ந்து விளை​யாட வந்த மேத்யூ ஷார்ட் 17 பந்​துகளில் 8 ரன்​கள் எடுத்த நிலை​யில் அக்​சர் பந்​தில் ரோஹித்​திடம் பிடி​கொடுத்​தார்.

3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேப்​டன் மார்​ஷும், ஜோஷ் பிலிப்​பும் சிறப்​பாக விளை​யாடி அணியின் ஸ்கோரை வெகு​வாக உயர்த்​தினர். அணி​யின் ஸ்கோர் 99-ஆக இருந்​த​போது பிலிப், வாஷிங்​டன் சுந்​தர் பந்​தில் வீழ்ந்​தார்.

பின்​னர் வந்த மேட் ரென்​ஷா​வும், மார்​ஷும் நிதானத்​துடன் விளை​யாடி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினர்.

21.1 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 131 ரன்​கள் எடுத்து ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றது. மிட்​செல் மார்ஷ் 46 ரன்​களும், மேட் ரென்ஷா 21 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

HinduTmail

 

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்