இந்தியாவில் ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா?

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.

டில்லியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிறகு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்கள் சந்தித்தனர். அப்போது என் நண்பர் புடின் எனக்கூறிய பேட்டியை தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது . இந்த நட்புறவுக்கு 25 ஆண்டுக்கு முன்பே, அதிபர் புடின் நமக்கு உதவியாக இருந்தார்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பல மாற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா உறவு உறுதியாக உள்ளது. இந்தியா-ரஷ்யா ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளுக்கு இடையே எரிசக்தி துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் . உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் ஒன்றாக நின்று போராடி வருகின்றன. நமது இருதரப்பு உறவுகள் பல வரலாற்று மைல்கற்களைக் கடந்து செல்லும் நேரத்தில், ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா-ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். 2030ம் ஆண்டு வரை இந்தியா-ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் நிரந்தர தீர்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். உக்ரைன் பிரச்னையில் இந்தியா ஆரம்பத்திலிருந்தே அமைதியை ஆதரித்து வருகிறது. உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்க தயாராக உள்ளது, எதிர்காலத்திலும் இந்த நிலைப்பாடு தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

anu

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

December 6, 2025

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர

co

கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடி…

December 6, 2025

மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட

de

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல்; 09 பேருக்கு அபராதம்

December 6, 2025

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம்

jaffna muni

யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

December 6, 2025

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று(5) 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Thurai rat

வெள்ள அனர்த்தத்தைத் தடுப்பதற்கான திட்டம்

December 6, 2025

அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு பாராட்டு, மட்டக்களப்பில் வெள்ளம் தடுப்பதற்கான திட்டத்துக்கு 10,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என

rohan

சஜித் கட்சியின் வெலிகம அமைப்பாளர் பதவி விலகினார்!

December 6, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும், வெலிகம நகரசபை முன்னாள் தலைவரும் ரெஹான் ஜயவிக்ரம அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின்

maha

பெருக்கெடுத்தது மகாவலி கங்கை…

December 6, 2025

வரலாறு காணாத வகையில், மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை

Saji

வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்புச் செய்த வேளை தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது அவர்களை குற்றம் சாட்டி வருகிறது!

December 5, 2025

நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி

sridharans

தமிழ் மொழி புறக்கணிப்பு?

December 5, 2025

தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே

Death-2

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்; பெண் பலி

December 5, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கசகல மற்றும் பெடிகம சந்திப்புக்கு இடையில் 160 கி.மீ தூரத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில் ஒரு