இந்தியாவில் தேசிய விரோத செயல்களில் ஈடுபட்டதாக 2900 பேர் வரை கைது!

தேசிய விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பாயும் உபா சட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 2,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 42 சதவீதம் பேர் ஜம்மு காஷ்மீரில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத செயல்கள் மற்றும் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 2,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லோக் சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாலக்காடு காங்கிரஸ் எம்பி ஷாபி பரம்பில் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளித்ததாவது: 2023ம் ஆண்டில் நாடு முழுவதும் 2,914 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 1,206 பேர், அதாவது 42 சதவீதம் பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.

2022ல் 1,238 பேர் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசம் 1,122 கைதுகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 2022ல் 503 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அது இரட்டிப்பாகி உள்ளது.

2023ல் டில்லியில் 22 பேரும், 28 மாநிலங்களில் 1,686 பேரும், 7 யூனியன் பிரதேசங்களில் 1,228 பேரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசங்களின் கைது எண்ணிக்கையின் மொத்த சதவீத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரில் மட்டும் 98 சதவீதம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் (NCRB) தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளி விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உபா வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து மாநில வாரியான தரவுகள் ஏதும் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

fr

பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்குள் புகுந்த காரால் 10 பேர் பலி

December 6, 2025

பாரிஸ்: பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் அதிவேகமாக கார் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

dol

‘FIFA சமாதான விருது’டொனால்ட் டிரம்பிற்கு…

December 6, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான

mod

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது!

December 6, 2025

இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க