தமிழ்மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளாத தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசிய பேரவையினர் இந்தியாவில் சமஸ்டி அரசியலமைப்பு இல்லாத சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சமஸ்டிபற்றிபேசுவது எதற்காக என கேள்வி ஏழுப்பிள்ளார் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமசந்திரன் சமகால அரசியல் நிலவரம் தெடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்;
புதிய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியலுக்குப் புதியவர் அவருக்கு அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள காலம் தேவை அவ்வாறான சூழலில் அவர்களிடம் சென்று எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி ஏற்புடையது அல்ல ஏக்கிய ராச்சிய என்கின்ற அரசியல் அமைப்பும் எமக்குத் தேவையில்லை சமஸ்டிதான் தேவை என்ற விடையங்களை தமிழ்நாட்டு முதலமைச்சருடன் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றார்கள் இந்தியாவில் இருக்கக்கூடியது சமஸ்டி அரசியல் அமைப்பு அல்ல அது அரைகுரையான அரசியல் அமைப்பே அங்குள்ளது.
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநியலங்கள் தங்களுக்கு சமஸ்டி அரசியல் அமைப்பு முறைவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் இத்தகைய நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசியப் பேரவை அங்குள்ளவர்களைச் சந்தித்து எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி நிறுத்தப்படவேண்டும் எனக்கூறுவது சாலப்பொருத்தமாகும்.
இங்குள்ள அரசியல் அமைப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்பதும் ஒற்றையாட்சிக்குள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளப்பறிப்பதும் போன்ற விடையங்கள் இருந்தாலும் இருக்கின்ற அடையாளங்களை வைத்து எவ்வாறு இறுக்கமாக கொண்டு செல்லலாம் என்று அதற்கான போராட்டங்களை செய்து அதிகாரங்களை அதிகரிக்கச் செய்வது என பல விடையங்கள் இருக்கின்றன. அவை எதையும் செய்யாது மாகாண சபைகள் வேண்டாம் என கூறுவதும் எங்களுக்கான புதிய முழுமையான ஒரு சமஸ்டியைக் கொண்டு வருவதற்கான வழிவகை இருக்கவேண்டும்.
இந்தியா என்பது முழுமையான சமஸ்டி அரசியல் அமைப்பைப் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்காது அவர்களது நாட்டில் அது இல்லை எனவே இந்தியா இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே எதையும் பேசுவார்கள் வெளிநாடுகளுடன் பேசுகின்றபோதும் செம்மணி புதைகுழி பற்றிப் பேசுவார்கள் தமிழ் மக்களின் இனப்படுகொலை பற்றிப் பேசுவார்கள் தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பேசுகின்றபோது இலங்கை அரசாங்கம் எதைச் சிந்திக்கின்றதோ அதை பற்றித்தான் பேசுவார்கள் ஆகவே இப்போது இருக்கக்கூடிய நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்வது என்பதே தங்களுடைய இஸ்ரத்திற்கு கொழும்பு தான் விரும்பியதை வடக்கிலும் கிழக்கிலும் எதையே செய்து கொண்டு போவதற்கான மறுப்பது அவர்கள் தங்கள் ஆளுநர்கள் ஊடாகவும் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் செய்கின்றபோது குறிப்பாக உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிக்ள இருக்கின்றபோது அதற்கு மேலாக வேறொரு அமைப்பு ஒன்றை உருவாக்கி கிராமத்தில் என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள் இவை மாகாண சபை இருக்குமானால் இத்தகைய விடையங்கள் நடைபெறமாட்டாது.
இன்றைய சூழலில் நாங்கள் அனைவரும் ஓர் அணியில் ஒன்றிணையவேண்டும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியாக இருக்கலாம் இது ஏற்கனவே அந்த நோக்கத்துடன் தான் பயணிக்கின்றது.
புதிய அரசியல் அமைப்பு வருவதாக இருந்தால் அதில் சமஸ்டியை உள்ளடக்கவேண்டும் எனக்கூறுவது எந்தத் தப்பும் கிடையாது அவ்வாறு ஒன்று வருகின்றபோது நாங்கள் எங்களுக்கு சமஸ்டி அமைப்பு தேவை என்பதை ஒட்டுமொத்த தீர்க்கமான விடையத்தை அரசாங்கத்திற்கு அளுத்தமாக கூறமுடியும் அதைக்கூகின்ற அதே சமயம் அரசாங்கத்திடம் அதனை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு எம்முடன் கைவசம் என்ன இருக்கின்றது என்ற கேள்வி இருக்கின்றது. நாங்கள் ஒரணியாக இணைந்து ஒரேகுரலாக தமிழ்மக்கள் தேவையை முன்வைப்பதே சிறந்தது தனியே சந்தித்து கொள்வது தனி பிரச்சாரத்திற்கு உகந்த்தாகும் என்றார்.