இணையவழி மோசடி மையங்கள் குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கை

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் இணையவழி மோசடி மையங்கள் (Cyber-enabled fraud compounds), மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் எச்சரித்துள்ளது.

கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இத்தகைய மையங்கள் ஒரு “தன்னிறைவு பெற்ற நகரங்கள்” போலச் செயல்படுவதாகவும், அங்கு சுமார் 3 இலட்சம் பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் கண்காணிப்பில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மேகாங் (Mekong) பிராந்தியத்தில் மட்டும் இந்த மோசடித் தொழில் ஆண்டுக்கு சுமார் $43.8 பில்லியன் டொலர் மதிப்பிலான வருவாயை ஈட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இங்கு பணிபுரியும் நபர்கள் பெரும்பாலும் அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, ஆள் கடத்தல் முறையில் உள்ளே கொண்டு வரப்படுகின்றனர்.

அங்கு அவர்களின் கடவுச்சீட்டுகள் பறிக்கப்பட்டு, கம்பிவேலிகளால் சூழப்பட்ட வளாகங்களுக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

இலக்குகளை எட்டத் தவறுபவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதாகவும், மின்சார அதிர்ச்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் பட்டினி போன்ற சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சமூக ஊடகங்கள் மூலம் நபர்களைக் கண்டறியவும், போலி உரையாடல்களை உருவாக்கவும் தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இந்தக் குற்றக் கும்பல்கள் பயன்படுத்துவது கவலையளிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இந்த மோசடி மையங்கள் அரசு அதிகாரிகளின் பின்னணியுடன் செயல்படுவதால், சட்ட அமுலாக்கத் துறையினரால் இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

தவிர்க்க மேற்கொள்ளப்படும் பல சோதனைகள் வெறும் “கண் துடைப்பு” நடவடிக்கைகளாகவே முடிந்துவிடுகின்றன.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் குற்றவியல் மாநாட்டை (UN Crime Congress) முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதற்குப் தீர்வு காண வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு