இணையத் தடைகளை கண்டிக்கும் ஜனாதிபதியின் புதல்வர்

ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணையத் தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அவர்களின் மகன் யூசுப் பெசெஷ்கியான் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளை காட்டும் புகைப்படங்கள், காணொளிகள் பரவுவதை தள்ளிப்போடுவதால் எந்த பிரச்சினையும் தீராது என அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஆண்டில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியானின் மகனும் அரசு ஆலோசகருமான யூசுப், டெலிகிராம் பதிவொன்றில், இணையத் தடை தொடர்வதால் மக்கள் மற்றும் அரசாங்கத்துக்கிடையிலான இடைவெளி மேலும் பெருகும் என எச்சரித்துள்ளார்.

இணைய தடையினால் அரசாங்கத்தின் மீது அதிருப்தி வெளியிடாத தரப்பினரும் அதிருப்தி வெளிப்படுத்தும் தரப்பில் இணைந்து கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் போது நடந்த வன்முறைகள் குறித்த காணொளிகள் வெளிவருவது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், இணையத்தை முடக்குவதால் பிரச்சினை தீராது; அதை தற்காலிகமாக ஒத்திவைப்பதே நடக்கும் எனவும் யூசுப் பெசெஷ்கியான் தெரிவித்தார்.

இணையத் தடையை நீக்குவதால் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் அபாயத்தை விட, தடையைத் தொடர்வதால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என யூசுப் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.

இதேவேளை, இணையத் தடையின் பின்னணியில் அரசு கடுமையான அடக்குமுறையை மேற்கொண்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், நார்வேயைத் தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு இறந்தோரின் எண்ணிக்கை 25,000 வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்