இடர் பாதிப்புகளைத் தணிக்க வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா

உலகளாவிய வானிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (03) சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அதன் போது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, உடனடி உதவிகள் (நிவாரணம்), மீள்கட்டுமான உதவிகள் (வாழ்வைக் கட்டியெழுப்புதல்), நிரந்தரத் தயார்ப்படுத்தல் (எதிர்கால இடர்களை எதிர்கொள்ளல்).

வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்கினால், உதவிகளை விரைந்து வழங்க முடியும்.

அழிவடைந்த உட்கட்டுமானங்களின் சேத விவரங்களையும் வழங்குங்கள்

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இத்தகைய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என கூறினார்.

அதற்கு பேரிடர்களின் போது எப்போதும் முதலாவதாக கைகொடுப்பது இந்தியாதான் என்று குறிப்பிட்ட ஆளுநர், அதற்காக மாகாண மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் கூடுதலான அழிவுகளையும், அதிக உட்கட்டுமான அழிவுகளையும் எதிர்கொண்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இறங்குதுறைகள், போக்குவரத்து வீதிகள், பாலங்கள், சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் என பல்வேறு உட்கட்டுமானங்கள் அழிவடைந்துள்ள விவரங்களை அவர் முன்வைத்தார்.

வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் முகாம்களிலிருந்து படிப்படியாக வீடுகளுக்குத் திரும்புகின்றனர். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்பாகவும், மக்களின் வாழ்வாதாரம் சில இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பேரிடரின்போது இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கொன்சியூலர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

தினமும் நிவாரணப் பொருள்களுடன் விமானங்கள் வருகின்றமையையும், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் கொழும்பை வந்தடைந்துள்ளமை தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

accident

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து; சிறுவன் உயிரிழப்பு – பெற்றோர் படுகாயம்

May 26, 2026

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு, வீதியோரமிருந்த மதிலுடன் மோதி இடம்பெற்ற கொடூர விபத்தில் 12 வயதுடைய சிறுவன்

sha

விமல்வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

May 26, 2026

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, கடவுச்சீட்டு பெற்றதாக சஷி வீரவங்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணை ஜூலை 24 ஆம்

Anunayake

தற்போது பௌத்த சாசனத்திற்கு இருண்ட காலம் ஏற்பட்டுவிட்டது…

May 26, 2026

பௌத்த சாசனத்திற்கு தற்போது ஒரு இருண்ட காலம் உருவாகியுள்ளதாகவும், இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பௌத்த சமூகத்தின் நான்கு பிரிவினரும் ஒன்றிணைய

ele

தேர்தல் சட்டங்கள் மீளாய்வு

May 26, 2026

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான

f

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைவதால் பழிவாங்கல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன!

May 26, 2026

தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வயலுக்குள் கவிழ்ந்து விபத்து!

May 25, 2026

கஹதுடுவ, தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று இன்று (25) மாலை வீதியை விட்டு விலகி வயல்வெளியொன்றுக்குள்

Weather war

தொடரும் மண்சரிவு எச்சரிக்கை

May 25, 2026

ஆறு மாவட்டங்களிலுள்ள 24 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி

vesa

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்கு தடை?

May 25, 2026

தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தி குறித்து வட மாகாண ஆளுநரினால் அறிக்கை ஒன்று

WhatsApp Image 2026-05-25 at 22.57.47

கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலி

May 25, 2026

கரடிப்போக்கு – உருத்திரபுரம் வாகன விபத்தில் இளம் தாய் பலிகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிப்போக்கு – உருத்திரபுரம் பகுதியில் இன்று

par

சிறுவர் துஷ்பிரயோகம்: எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தீர்மானம்

May 25, 2026

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து

kalu

மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

May 25, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலுக்குப் படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று

Jeyatheepa

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா!

May 25, 2026

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜெயதீபா புண்ணியமூர்த்தி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பிரகாரம் இந்தத் தெரிவு