காத்தான்குடி மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் என்ற நீண்ட கால வேலை திட்டத்தினை காத்தான்குடி பிரதேசத்தில் அமுல்படுத்துவது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஊர் வீதி மஞ்சந் தொடுவாயில் அமைந்துள்ள அப்ரார் நிலையத்தில் நடைபெற்றது.
அண்மையில் எமது றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடியில் இள வயது மரணம் தொடர்பான ஆய்வின் முடிவினை Dr. அஸ்மி ஹசன் Consultant Physician தள வைத்தியசாலை அக்கரைப்பற்று, காத்தான்குடி மக்கள் எதிர்கொள்ளும் ஆரோக்கிய ரீதியான சவால்கள் என்ற தலைப்பில் Dr. MSM நுசைர் Consultant Physician தள வைத்தியசாலை காத்தான்குடி Presentation ஊடாக கருத்துக்களை வழங்கினர்.
கலந்து கொண்ட பங்காளர்களின் Stakeholders கவனக்குவிப்பை பெற்ற இரண்டு வைத்திய நிபுணர்களின் கருத்துக்கள் Suggestions எமது ஊரில் மிக அவசரமாக தலையிட்டு கூட்டாக உழைக்க வேண்டிய விடயங்கள் என்பதில் சகலரும் உடன்பாடாக கருத்துக்களை தெரிவித்தனர்.
இறுதி நிகழ்வாக இரண்டு வைத்திய நிபுணர்களின் கருத்தை மையப்படுத்திய பேச்சிலிருந்து நடைமுறைக்கு பங்காளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வினை றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் KMM நவாஸ் அவர்கள் நெறிப்படுத்தினார்கள்.
எதிர்காலத்தில் எமது ஊரில் காத்தான்குடி நகர சபை பிரதேச செயலகம் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வர்த்தக சங்கம் பெண்கள் அமைப்புகள் பள்ளி வாயில்கள் சமூக நிறுவனங்கள் ஆகியன இணைந்து கூட்டாக காத்தான்குடி மக்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் உழைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய தோடு ஒவ்வொரு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் நெறிப்படுத்தினார்.
இது சம்பந்தமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பொறுப்புக்கள் Action plan ஊடாக ஒவ்வொரு நிறுவனமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக செய்ய வேண்டிய நீண்ட காலத்தில் செய்ய வேண்டிய சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை இந்நிகழ்வில் முன்மொழிந்தனர் இதனை எதிர்காலத்தில் கூட்டாக எல்லோரும் இணைந்து அமுல்படுத்துவது எனவும் தீர்மானித்தனர்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் அல்ஹாஜ் SHM அஸ்பர் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் M.S சில்மியா காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி UL. நசூர் தீன் காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இனணப்பாளர் MBM பிர்தௌஸ் நளீமி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜம்மியத்தில் உலமா பிரதிநிதிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மருத்துவத்துறை சார்ந்தோர் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் கல்வியலாளர்கள் பொறியியலாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் பிரதேசத்தின் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் உட்பட நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்ந்தும் இவ்வேளை திட்டத்தின் ஏற்பாட்டாளராக Convener ஒருங்கிணைப்பாளராக செயல்படும் என்பதுடன் தேவையான தொழில்நுட்ப அறிவினை இந்த இரண்டு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் மற்றும் ஏனைய மருத்துவத்துறையைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்களின் உதவியுடன் வழங்க இந்நிகழ்வில் உடன்பாடு காணப்பட்டது.