ஆத்ம பலத்துடன் புதிய தொடக்கத்திற்காக நாம் எழுந்திருக்க வேண்டும் என்பதை சிவராத்திரி எமக்கு உணர்த்துகின்றது – சஜித்

நாம் முகம் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் சகோதர இந்து பக்தர்களுக்கு என்னால் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதற்கு முடிந்தமை பெரும் மகிழ்ச்சியாகும்.

மகா சிவராத்திரி என்பது இருளுக்கு மத்தியில் ஞான ஒளியைத் தேடிச் செல்லும் ஆன்மீகப் பயணமாகும்.

அது பூஜை, பக்தி மற்றும் தியானத்தின் மூலம் மனதை சுத்தப்படுத்தி, அநீதி, அவிசுவாசம் மற்றும் அகங்காரம் என்பவற்றை களைய வழியைக் காட்டும் உன்னத இரவாகக் கருதப்படுகிறது.

சிவபெருமானை வணங்கினால் மோட்சம் உதயமாகும். ஆகையால், மகா சிவராத்திரி தினம், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் போது பின்வாங்காமல், ஆத்ம விசுவாசத்துடன் புதிய தொடக்கத்திற்காக எழுந்திருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

மகா சிவராத்திரி நாள் உண்மை, நீதி நியாயம் மற்றும் கருணை ஆகிய மதிப்புகள் நமது வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

அநீதிக்கு எதிராக உண்மை வெல்லும், அவிசுவாசத்தை விட ஒற்றுமை வலிமையானது, இருளை விட ஒளி வலுவானது என்பதை இந்த உன்னத நாள் நமக்கு உணர்த்துகிறது.

நமது நாடு இன்று எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், மகா சிவராத்திரி தினம் நமக்கு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வந்து தருகின்றன.

இருளை நீக்கி ஒளியைப் பிரகாசிக்கச் செய்வது போல, நாமும் நாடாக முகம் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.

அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அந்நியோன்ய மரியாதை, மத நல்லிணக்கம், மற்றும் நம்மத்தியிலான சுமூகமான பிணைப்பு நமது நாட்டின் என்றும் நிலைத்திருக்கும் சொத்துக்களாகும் என்பதை நினைவில் கொள்வோம்.

ஆகவே, இன்று சிவராத்திரி நாளை கொண்டாடும் வேளையில், நம் இதயங்களில் பிரகாசிக்கும் ஒளிக்கீற்று நாடு முழுவதும் பரவி, அமைதியும், ஒற்றுமையும், செழிப்பும் நிறைந்த இலங்கையை உருவாக்குவதற்கு வழிவகுக்கட்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய