ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் ஆகாஷ், மாதுளன்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ், வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், ஆகிய இருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடி 9.10 என்ற சராசரியுடனும் 3.26 என்ற கட்டுப்பாடான பந்துவீச்சுடனும் விக்னேஸ்வரன் ஆகாஷ் 20 விக்கெட்களைக் கைப்பற்றி தனது பந்துவீச்சு ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்தத் தொடரில் இரண்டு அணிகளையும் சேர்ந்த வேறு எவரும் 10 விக்கெட்களை எட்டவில்லை.

இரண்டாவது அதிகூடிய 9 விக்கெட்களை இலங்கையைச் சேர்ந்த செத்மிக்க செனவிரட்ன வீழ்த்தியிருந்தார்.

யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் சுழல்பந்துவீச்சாளரான ஆகாஷ், 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்திலும் சிறப்பாக பந்துவீசுவார் என நம்பப்படுகிறது.

குகதாஸ் மாதுளன் இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி 3 விக்கெடகளைக் கைப்பற்றினார்.

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளரான குகதாஸ் மாதுளனுக்கு இந்தத் தொடரில் கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சாரவும் உப தலைவராக கிங்ஸ்வூட் வீரர் கவிஜ கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெற்ற ரமிரு பேரேரா, புலிஷ குணதிலக்க, சேனுஜ வேக்குனகொட, ஜேசன் பெர்னாண்டோ ஆகிய நால்வரும் ஆசிய கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

அவர்களுக்கு பதிலாக சமரிந்து நெத்சர, துல்னித் சிகேரா, கித்ம விதானபத்திரன ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இளம் வீரர்களைத் தயார் படுத்தும் களமாக 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அமையவுள்ளது.

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு

kumara

அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது

March 4, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக