அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை, தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில் உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மிகமோசமான இயற்கைப் பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு பிரதியமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துக் கண்டனத்தை வெளிப்படுத்தியும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்துடன் இணைந்து சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது, குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரையும் இலக்குவைத்து சமூகவலைத்தளங்களில் மிகமோசமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்கள் பாதுகாப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அச்சட்டத்தின் 5 ஆம் சரத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள் நெருக்கடி நிலையின்போது பகிரப்படும் தகவல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சர் சுனில் வட்டகல இவ்வாறு கூறினாலும், அவசரகாலச்சட்டமானது விமர்சனங்களையோ அல்லது கருத்துக்களையோ ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்தானது அனர்த்த முகாமைத்துவம் எனும் போர்வையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.

நாட்டில் நெருக்கடி நிலவும் வேளையில் உரிய நேரத்தில் சரியானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான செய்திகளை வழங்கவேண்டிய மிகப்பாரிய பொறுப்பு ஊடங்களுக்கு உண்டு.

அதேபோன்று உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பொதுமக்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்துக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த