அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பேசும்; மக்களும் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் – தி. யோகநாயகன்

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையை விரிவாக ஆராயும் போது நாளை நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத் திற்கு ஐக்கிய மக்கள் முன்னணி தனது வலுவான கண்டனத்தை அதன் ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம் தி. யோக நாயகன் வாயிலாக அறிவித்துள்ளது.

இன்று நாட்டில் உருவாகி வரும் அரசியல் மாற்றங்கள், குறிப்பாக தமிழ் ; மக்களுக்கு இதுவரை கிடைக்காத புதிய வாய்ப்புகளையும் நம்பிக்கையயும் உருவாக்கி வருகின்றன. சுதந்திரத்துக்கு பின்னர்
76 ஆண்டுகளாக பல ஆட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள்;, சமத்துவ கோரிக்கைகள்; மற்றும் பாதுகாப்பு தேவைகளை உதாசீனப்படுத்தியதோடு, சில காலங்களில் ஒடுக்குமுறைகளையும் நிகழ்த்தியமை வரலாற்றுச் சாட்சியம். இந்த நிலையில் மாற்றத்திற்கான தெளிவான பாதையை வகுக்கும் ஒரு அரசாங்கம் தற்போது பொறுப்பேற்றிருப்பது மிக முக்கியமான முன்னேற்றமாகும்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி யேற்ற முதல் ஆண்டிலேயே கணிசமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்;, பொருளாதார மீட்பு முயற்சிகள், போதைப் பொருள் ; கட்டுப்பாட்டு திட்டங்கள், கல்வித் துறைக்குத் தேவையான திருத்தங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அரசு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. சமூக நீதி மற்றும் நிர்வாக பொறுப்புணர்வு ஆகியவற்றில் அரசின் உறுதியான அணுகுமுறை மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற்று வருகிறது.

அத்தகைய சூழலில் காரணமற்ற அரசியல் குற்றச்சாட்டுகளின் அடிப்டையில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கும் மக்களின் நலனுக்கும் இடையூறாக மட்டுமே அமைகின்றன.

கடந்த கால அரசியல் தலைவர்கள் நாட்டைப் பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளியதையும் சிறுபான்மை இன மக்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பெருமளவில் ஒடுக்கியதையும் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. நாளை ற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமும் அதே அரசியல் அச்சத்தின் வெளிப்பாடே.

எனவே தமிழ் பேசும் மக்களும் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தை முழுமையாகப் புறக்கணிப்பதே நல்ல முடிவாகும். நாட்டை இனமத வேறுபாடின்றி சமமாக வழிநடத்தும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவு தொடர வேண்டும்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார மேம்பாடு, இன ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை ஐக்கிய மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.

By C.G.Prashanthan

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்