அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை திங்கட்கிழமை (15) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ‘டித்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள், வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமுகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே, சேவைக்கு சமுகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறை வழங்குதல் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாத்திரம் பொருத்தமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

chi'

தென் அமெரிக்க நாடான சிலியில் 35 ஆண்டுக்கு பின் மீண்டும் வலதுசாரி அரசு

December 16, 2025

சிலியின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். தென் அமெரிக்க

hong

தேசத்துரோக வழக்கு; ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபர் குற்றவாளி

December 16, 2025

ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபரும், ஜனநாயக போராளியுமான ஜிம்மி லாய், 78, சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட

au pa

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ – ஆஸி பிரதமர்

December 16, 2025

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவில்

be

யுனைட்டெட் – போர்ண்மெத் போட்டி சமநிலையில்

December 16, 2025

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர்

saba3

பெண்கள் டென்னிஸ்; சிறந்த வீராங்கனையாக சபலெங்கா

December 16, 2025

தரவரிசையில் ஆண்டு முழுவதும் முதலாமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரஸின் அர்யனா சபலெங்காவை

de

பொரெஸ்டிடம் தோற்ற டொட்டென்ஹாம்

December 16, 2025

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம்

pre

பிரிமியர் லீக் ஏலம்: யாருக்கு ‘ஜாக்பாட்’

December 16, 2025

இந்தியாவில், பிரிமியர் லீக் (‘டி-20’) 19வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட

ru

ரஷ்ய ஏவுகணை எரிபொருள் ஆலைகள் மீது அதிரடி தாக்குதல்

December 16, 2025

ரஷ்ய எரிவாயு பதப்படுத்தும், ஏவுகணை எரிபொருள் ஆலைகளைத் தாக்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. தெற்கு ரஷ்ய நகரமான அஸ்ட்ராகானில் உள்ள ஒரு

bre

தெற்கு பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர சிலை

December 16, 2025

தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை

rail

18 நாட்களுக்கு பின் கிழக்கு ரயில் ஓடுகிறது…

December 16, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்கள், பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்த பதினெட்டு நாட்களுக்குப் பிறகு, இன்று (16) காலை முதல்

thi

முன்னாள் சபாநாயகர் ஏற்படுத்திய விபத்து சபைக்கு வருகிறது

December 16, 2025

முன்னாள் சபாநாயகர் எம்.பி. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தை ஏற்படுத்தியதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை

Judment

ஒருவரைத் தாக்கி பற்களை உடைத்த பிரதேச சபை உறுப்பினருக்குப் பிணை

December 16, 2025

பொலன்னறுவை, லங்காபுர பகுதியில் ஒருவரைத் தாக்கி நான்கு பற்களை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லங்காபுர பிரதேச சபை உறுப்பினரை ஒரு