அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது – முஜிபுர் ரஹ்மான்

ஜனாதிபதி அநுரகுமார சட்டம் அனைவருக்கும் சமமானது என கூறி வருகின்ற போதிலும் அது அவ்வாறில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி ஏற்ற காலம் முதல் இவ்வாறு கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், ஜே.வி.பியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு மேலே இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் பிரச்சினையின் போதும், இரத்தினபுரியில் இடம்பெற்ற பிரச்சினையயின் போதும் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நேரில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சட்டத்திற்கு மேல் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி அநுர எந்த நேரத்திலும் சட்டம் அனைவருக்கும் சமமானது என மந்திரம் ஒதி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கூறுவது போல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ரண்வலவின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரன்வல மற்றும் இரத்தினபுரி சம்வங்களின் போது சட்டம் எவ்வாறு வளைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த விடயமே என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டத்தில் பணம் பெற்றவர்களுக்கு நாமல் விடுக்கும் எச்சரிக்கை

கோட்டாபய அரசாங்கத்தை விரட்டுவதற்கு முன்னெடுப்பட்ட அரகலய போராட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்த பெறப்பட்ட பணம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்கங்களை மாற்ற பணம் எவ்வாறு முதலீடு செய்யப்பட்டது என ஆராய்வதாக அறிவித்திருந்தார்.

மேலும் ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி திட்டம் (United Nations Development Programme) மூலம் பணம் எவ்வாறு இவற்றுக்கு முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்தது உண்மையாகும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை வாங்கினர்.

சிலர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களில் தெரியவந்துள்ளது என்றும் கூறினார். போராட்டத்தின் பின்னர் ஒரு பகுதியினர் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களாகினர்.

சிலர் வாகனங்கள் மற்றும் வீடுகளை பெற்றுக் கொண்டனர்.ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பன்னிரண்டு பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய