நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் சவாலாக அமையாது என நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தளாய் நகரில் நிலவும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகப் பரிசீலிப்பதற்காக இன்று (21) கந்தளாய் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சர் தனது விஜயத்தின் போது, நீர் வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான பல கட்டிடங்களையும் வசதிகளையும் நேரடியாக ஆய்வு செய்தார்.
சேவைத் தடங்கல்கள், பராமரிப்பு பிரச்சினைகள் மற்றும் உடனடித்தீர்வு காணப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
நுகேகொட பேரணி குறித்து அமைச்சர் கருத்து இந்த விஜயத்தின் போது, இன்று நடைபெறவுள்ள நுகேகொட பேரணி குறித்து ஊடகங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நுகேகொட பேரணி மக்களால் நிராகரிக்கப்பட்ட சில குழுக்களால் நடத்தப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே மக்களின் அவமதிப்பையும் நிராகரிப்பையும் சந்தித்துள்ளனர்.
அதனால்தான் நுகேகொடை பகுதிக்குச் செல்லும் வீதிகளில் பல இடங்களில் மக்கள் புல்லை தொங்கவிட்டுள்ளனர். இது அரசாங்கம் மூலம் செய்யப்பட்டதாகக் கூற முடியாது.
அந்தக் குழுக்களுக்கு மிகச் சிறிய அளவிலான ஆதரவு வட்டம் மட்டுமே உள்ளது. அவர்களில் சிலர் பங்கேற்றாலும், இந்தப் பேரணி அரசாங்கத்திற்கு எந்தவித சவாலாகவும் அமையாது என குறிப்பிட்டுள்ளார்.