அரசாங்கத்திற்கு எதிரான நாளைய ஆர்ப்பாட்டத்தை தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் முற்றாக புறக்கணிக்க வேண்டும் – ந. ரவிகுமார்

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகைளை நுணுக்கமாக கவனித்துப் பார்ப்பதற்காக, நாளை நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் சில எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கான எமது தெளிவான மற்றும் பொறுப்பான நிலைப்பாட்டை அறிவிக்க விரும்புகிறோம்.

இன்று நாட்டில் உருவாகி வரும் அரசியல் மாற்றங்கள், சிறுபான்மை தமிழ் மக்களுக்கு வரலாற்றில் இதுவரை கிடைக்காத அளவுக்கு புதிய வாய்ப்புகளையும் சாதகமான சூழலையும் வழங்கி வருகின்றன. சுதந்திரம் கிடைத்தது முதல் 76 ஆண்டுகளாக ஆட்சி செய்த பெரும்பாலான அரசுகள் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும் அடிப்படை உரிமைகளையும் புறக்கணித்ததோடு, சில நேரங்களில் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை நிகழ்த்திய காலப்பகுதிகளும் இருந்தன. இந்நிலையில், தற்போது திசைமாற்றத்தை உருவாக்கும் ஒரு அரசாங்கம் அதிகாரத்தில் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகும்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையில் செயல்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது முதல் ஆண்டிலேயே கணிசமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஊழல் தடுப்புக்கு வலுவான நடைமுறைகள், பொருளாதார மீட்புக்கான திடமான நடவடிக்கைகள், கல்வித் துறையில் நீண்டகாலமாக தேவைப்பட்ட சீர்திருத்தங்கள் போன்ற முக்கிய துறைகளில் அரசு மக்களின் நம்பிக்கையை மறுபடியும் கட்டியெழுப்பியுள்ளது. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு, பல தலைமுறைகளாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதியாகக் கருதப்படுகிறது.

தமிழ் மக்களின் நீண்டகால தேவைகள், அரசியல் கோரிக்கைகள், பாதுகாப்பு மற்றும் சமத்துவ உரிமைகள் ஆகியவற்றில் அரசு காட்டி வரும் நேர்மையான அணுகுமுறையைப் பொருட்படுத்தாமல் போராட்டங்களில் ஈடுபடுவது தமிழ் சமூகத்தின் எதிர்கால நலனுக்கும் பாதகமாகும்.

கடந்த கால அரசியல்வாதிகள் நாட்டைப் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடையச் செய்ததும், சிறுபான்மை மக்களின் வாய்ப்புகளையும் உரிமைகளையும் ஒடுக்கியதும் அனைவரும் அறிந்த உண்மை.

இன்றோ புதிதாக உருவாகும் அரசியல் பண்பாட்டால் மக்கள் மத்தியில் ஆதரவு இழக்க வேண்டிய அச்சத்தில் சில எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கில் தேவையற்ற போராட்டங்களை ஊக்குவித்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டமும் அதே போன்ற அரசியல் அச்சத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் நுகேகொடையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதே பொறுப்பான முடிவாகும். நாட்டை இனத்துவ வேறுபாடின்றி சமமாக நடத்தும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் ஆதரவு தொடர வேண்டும். இந்த அரசாங்கம் சரியான திசையில் நாட்டைக் கொண்டு செல்கிறது என்பது தெளிவாகத் தெரியும்போது, தேவையற்ற குழப்பங்கள் மற்றும் பொய்யான அரசியல் விளம்பரங்களின் பாதையில் மக்கள் செல்ல வேண்டிய அவசியமில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது வலுவான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளையும் நாட்டின் நீண்டகால முன்னேற்றத்தையும் கணக்கில் கொண்டால், இவ்வாறான போராட்டங்கள் நாட்டிற்கு எந்தவித நன்மையயும் ஏற்படுத்தாது என்பதும் தெளிவாகும். நாட்டின் அரசியல் நிலைத் தன்மை, பொருளாதார மீட்பு மற்றும் இன ஒற்றுமையப் பாதுகாப்பதற்காக மக்களும் அனைத்து சமூகங்களும் பொறுப்புடன் நடந்து கொள்வதை எமது கட்சி வலியுறுத்துகிறது.

நாட்டின் முன்னேற்றமும் மக்களின் நலனும் கருதி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்கு தமிழ் மக்களும் தமிழ் கட்சிகளும் தமது உறுதியான ஆதரைவத் தொடர்ந்து வழங்க வேண்டும் எனபதே எமது தாழ்மையான வேண்டுகோள்.

By C.G.Prashanthan

Screenshot 2025-07-30 100024

நாடெங்கும் நலமும் வீடெங்கும் வளமும் பெருகட்டும்: எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து!

September 13, 2026

சென்னை: விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குத் தனது உளங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

images - 2026-09-13T134857.284

“கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக கூட்டணிக்கு வருவார்கள்!” – அமைச்சர் ஷாஜகான் நம்பிக்கை

September 13, 2026

நாகர்கோவில்: கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், அவர்கள் வரக்கூடிய நாள்களில் அதிகாரப்பூர்வமாகத்

Tamil_News_lrg_432121120260912210533

லண்டன் கார் பந்தயம்: விபத்தைத் தாண்டி 3-வது இடத்தைப் பிடித்து நடிகர் அஜித் சாதனை!

September 13, 2026

லண்டன்: லண்டனில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்த புகழ்பெற்ற ‘லீ மான்ஸ் கப்’ (Le Mans Cup) கார்

images - 2026-09-13T133956.877

“வார்த்தைகளை அளந்து பேசுவது அரசியல்வாதிகளின் கடமை!” – அவதூறு பேச்சுகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம்

September 13, 2026

சென்னை: அரசியல் விமர்சனம் என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுவதும் மிரட்டல் விடுப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது

36a6a19c6587d011b2834d714207e935

“லீடர்னா என்னன்னே தெரியாம பேசுறது ஏமாத்து வேலை!” – பிக்பாஸ் மேடையில் விஜய் சேதுபதி பேச்சு; முதலமைச்சருடன் ஒப்பிட்டுப் பரவும் சர்ச்சை!

September 13, 2026

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு (Leadership) குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி

26-6aa59dd45056b

லண்டன் கார் பந்தயத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த த்ரிஷா!

September 13, 2026

லண்டன்: இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று தொடங்கி

ba4598f0-5b62-11ee-8789-13750be9e58d.jpg

“நாவைக் காக்க வேண்டும்”: திமுகவினரின் அநாகரிகப் பேச்சுக்குத் திருக்குறள் வழியே கனிமொழி கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய நிலையில், அவர்களுக்கு அறிவுரை

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“ஆ.ராசா மற்றும் சேகர்பாபுவின் பேச்சுகள் திமுகவின் வன்மத்தைக் காட்டுகிறது” – அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம்!

September 13, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யைக் கண்டித்து திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மற்றும் முன்னாள் அமைச்சர்

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; ஆவணங்கள் இல்லை” – அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

September 13, 2026

துரை: அவசரநிலையின் போது மிசா சட்டத்தின் (MISA) கீழ் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், வேறு காரணங்களுக்காகவே அவர்

b36f3954a794f9382daecd17359724952bb8ee0389728dfd9ea790750de3a7a2

“இல்லம் தேடி மதுவைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்!” – ராமநாதபுரம் திமுக ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி பேச்சால் சலசலப்பு

September 13, 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவர் நாக்கு

eft9J2c8vpDNB_Wg

தாராபுரம் இடைத்தேர்தல்: எனக்காக முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்வார் – தவெக வேட்பாளர் சத்தியபாமா தகவல்!

September 13, 2026

தாராபுரம் / சென்னை: நடைபெறவுள்ள தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றும்,

768-512-25775621-thumbnail-16x9-madurai-malli

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 1,500-க்கு விற்பனை!

September 13, 2026

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூர்த்த நாள்களை முன்னிட்டுத் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைப் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை