அரசாங்கத்தால் வைத்தியசாலைகளில் காணப்படும் அடிப்படை குறைபாடுகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியவில்லை!

ஒரு நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகளாக சுகாதாரத்தையும் கல்வியையும் கருதலாம். இந்த மனித மற்றும் அடிப்படை உரிமைகளை வெறும் பேச்சுக்களோடு மாத்திரம் சுருக்கிக் கொள்ளாது, செயல்பாடுகள் மூலமாகவும் பாதுகாக்க வேண்டும். நமது நாட்டின் இலவச சுகாதார சேவையில் தற்போது உபகரணங்கள், வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்றன. அவ்வாறே, வைத்தியசாலைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமையினால் மக்களின் உயிருக்கு ஆபத்தும் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரூ. 31 இலட்சம் மதிப்புள்ள இரத்த மாற்று இயந்திரமொன்றையும், (Dialysis Machine), 6.5 இலட்சம் மதிப்புள்ள RO plant இயந்திரமொன்றையும், மொத்தமாக 39 இலட்சம் மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை அநுராதபுரம், கெபிதிகொல்லாவ தள வைத்தியசாலைக்கு நேற்றைய (16) தினம் நன்கொடையாக வழங்கி வைத்ததன் பிற்பாடு,
கெபிதிகொல்லாவ நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் அனுராதபுரம், கெபிதிகொல்லாவ பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில், கெபிதிகொல்லாவ சந்தைத் தொகுதி வளாகத்தில், கிராமத்துக்கு கிராமமாக, வீட்டுக்கு வீடாக எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை இடம்பெற்றது. அச்சமயம், விடுக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் முகமாகவே நேற்றைய தினம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

இரத்த மாற்று இயந்திரங்களுக்கு கூட தட்டுப்பாடு காணப்படுகின்றன. இதன் காரணமாக, நோயாளிகள் தனியார் துறை மூலம் பணம் செலுத்தி இந்த சேவைகளைப் பெற்றுக் கொண்டதும் நடந்துள்ளது. இலவச சுகாதாரம் என்பது பணம் செலுத்தி சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல, இது நலன்புரி அரசின் ஒரு முக்கிய அங்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வளப் பற்றாக்குறையால், சுகாதார சேவை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சில வைத்தியசாலைகளில் அடிப்படை உபகரணங்கள் இல்லாமையால், பணம் செலுத்தி சில சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டி காணப்படுகின்றன. இருப்பதை விட சிறந்த மட்டத்தில் சுகாதார சேவையை வலுப்படுத்துவோம் எனக் கூறிய தற்போதைய அரசாங்கம், இன்று இலவச சுகாதாரத்துறையை பலவீனப்படுத்தியுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்குத் தேவையான டயாலிசிஸ் சேவைகளுக்கான உபகரணங்களை கடையிலிருந்து கொண்டு வர வேண்டி காணப்படுகின்றன. இதற்குத் தேவையாக காணப்படும் நிதிகளை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்