அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ளப் போவதில்லை – வத்திக்கான் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ‘அமைதி திட்ட அமைப்பை’ உருவாக்கியுள்ளார்.

இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அமைப்பின் முதலாவது கூட்டம் வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இதில் காசா மறுசீரமைப்பிற்காக 05 பில்லியன் டொலர் நிதி திரட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் இது குறித்துத் தெரிவிக்கையில்,

“வத்திக்கான் என்பது பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல, அதன் தன்மை வேறுபட்டது. சர்வதேச அளவில் நெருக்கடி நிலைகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, இந்த அமைப்பில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்.”

ட்ரம்ப்பின் இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணையாமல், வெறும் ‘பார்வையாளர்களாக’ மட்டுமே கலந்துகொள்ள தீர்மானித்துள்ளன.

காசா விவகாரம் குறித்துப் பேசும் இந்த அமைப்பில் பாலஸ்தீனப் பிரதிநிதிகள் எவரும் சேர்க்கப்படவில்லை என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காசாவில் கடந்த அக்டோபர் முதல் நிலவி வரும் போர் நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 72,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவும் கடும் பஞ்சம் மற்றும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் பாப்பரசர் லியோ தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய