எனவே உயிரிழந்த அனைவருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எம்மால் ஆறுதல் சொல்வது எப்படி என்று தெரியாது ஆனால் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ரொசிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதேச வாசிகள் அரச அதிகாரிகள் கிராம சேவகர்கள்,வைத்தியர்கள்,விரியுரையாளர்கள் சமூக சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.