அதிகபட்ச செயற்பாட்டு திறனை எட்டியது கட்டுநாயக்க விமான நிலையம்!

கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) தற்போது அதன் திட்டமிட்ட கொள்ளளவை விட அதிகமாக இயங்குகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளிர்காலத்திற்காக வாரத்திற்கு கூடுதல் விமான இடங்களுக்கான சுமார் 40 புதிய கோரிக்கைகள் வந்துள்ளன.

ஆனால் அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே குறைந்த இடவசதி காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுற்றுலா துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2025 அக்டோபர் இரண்டாம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலாத் தலைவர்கள் உச்சி மாநாடு 2025இல் பேசிய துணை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

திட்டமிடப்பட்ட விமான நடவடிக்கைகள் மற்றும் வாடகை விமானங்களுக்கான இந்த கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றில், ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டுமே மத்தள விமான நிலையத்தை மாற்று விமான நிலையமாகத் தேர்ந்தெடுத்துள்ளன, ஆனால் பல விமான நிறுவனங்கள் வாய்ப்புகள் இல்லாததால் அந்த யோசனையை கைவிட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஆரம்பத்தில் ஆண்டுக்கு ஆறு மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது, ஆனால் தற்போது ஆண்டுக்கு 10 மில்லியன் பயணிகளை கையாள்வதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இந்நிலையில், நீண்ட காலமாக தாமதமாகி வரும் விமான நிலைய விரிவாக்க பணிகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுமார் ஆறு தசாப்தங்களாக விமான நடவடிக்கைகளை எளிதாக்கி வரும் கட்டுநாயக்க விமான நிலையம், தற்போது இரண்டு ஓடுபாதைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன் சவால்களை நிவர்த்தி செய்வது ஒரு முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விமான நிலைய செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைவதில் சுற்றுலாத் துறையும் நேரடி சவால்களை எதிர்கொள்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.7 மில்லியனை கடந்துள்ளமை குறிப்பித்தக்கது.

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்