அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை?

சபுகஸ்கந்த பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி 6 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவரமண்டிய தெனிமுல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வல பயணித்த ஜீப், முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறம் மோதி, எதிர் திசையிலிருந்து வந்த கார் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்துச் சம்பவத்தில் காரில் பயணித்த 6 மாதங்கள் பூர்த்தியான பச்சிளம் குழந்தை, குழந்தையின் தாய் (25) மற்றும் பாட்டி (55) ஆகிய மூவரும் காயமடைந்திருந்தனர்.

இந்த, சம்பவம் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், வாகனத்தைச் செலுத்தியபோது சந்தேகநபரான அசோக்க ரன்வல மதுபோதையில் இருந்தாரா என்பதற்கான வைத்திய பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வலவிடமிருந்து பெற்ற இரத்த மாதிரி அரச இரசாயனபகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

அத்தோடு, அவர் செலுத்திய ஜீப் வண்டியில் நீண்டகாலம் பராமரிக்கப்படாத இயந்திரக் கோளாறு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இவ்விடயம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேவேளை, விபத்துச் சம்பவத்தை அடுத்து கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதிவானின் உத்தரவுக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மஹார நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்த நிலையில், மஹார நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாளிகாகந்த நீதிவான் ஜானகி பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேரில் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான

photo-collage.png (18)

கம்போடியா-தாய்லாந்து யுத்தம் நிறுத்தக் கோரி களனி ரஜமஹா விகாரையில் சத்தியாக்கிரகம்!

December 16, 2025

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தக் கோரி, ஓமல்பே சோபித தேரர் தலைமையில் 250க்கும் மேற்பட்ட பிக்குகள்

v

தொல்பொருள் திணைக்கள பதாகை அகற்றல் வழக்கு ஒத்திவைப்பு

December 16, 2025

வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் தொல்பொருள் திணைக்கள பதாதை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் மாசி மாதம்

sil

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

December 16, 2025

1982ஆம் ஆண்டு நாட்டின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய இலங்கையின் முன்னாள் லெக்

wind

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சி…

December 16, 2025

இன்றிலிருந்து நாட்டில் மழை ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கில் ஏற்படும் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின்

ba

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து; இருவர் காயம்

December 16, 2025

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா

ce

பதிவு சான்றிதழ்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

December 16, 2025

அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும்