அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை?

சபுகஸ்கந்த பகுதியில் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தி 6 மாதப் பச்சிளம் குழந்தை உட்பட 3 பேரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவரமண்டிய தெனிமுல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில் முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக்க ரன்வல பயணித்த ஜீப், முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறம் மோதி, எதிர் திசையிலிருந்து வந்த கார் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்துச் சம்பவத்தில் காரில் பயணித்த 6 மாதங்கள் பூர்த்தியான பச்சிளம் குழந்தை, குழந்தையின் தாய் (25) மற்றும் பாட்டி (55) ஆகிய மூவரும் காயமடைந்திருந்தனர்.

இந்த, சம்பவம் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், வாகனத்தைச் செலுத்தியபோது சந்தேகநபரான அசோக்க ரன்வல மதுபோதையில் இருந்தாரா என்பதற்கான வைத்திய பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வலவிடமிருந்து பெற்ற இரத்த மாதிரி அரச இரசாயனபகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

அத்தோடு, அவர் செலுத்திய ஜீப் வண்டியில் நீண்டகாலம் பராமரிக்கப்படாத இயந்திரக் கோளாறு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இவ்விடயம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேவேளை, விபத்துச் சம்பவத்தை அடுத்து கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதிவானின் உத்தரவுக்கமைய பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மஹார நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்த நிலையில், மஹார நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாளிகாகந்த நீதிவான் ஜானகி பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேரில் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த