ஸ்டோனி க்ரீக்கில் (Stoney Creek) உள்ள குடியிருப்புப் பகுதியில் இருவர் உயிரிழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஹாமில்டன் (Hamilton) பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டோனி க்ரீக்கில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இருவர் உயிரிழந்துள்ளதாக ஹாமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரைமல் வீதி கிழக்கு (Rymal Road East) மற்றும் அப்ரோ சென்டெனியல் பார்க்வே (Upper Centennial Parkway) ஆகியவற்றிற்கு அருகிலுள்ள கேண்டில்வுட் டிரைவில் (Candlewood Drive) அமைந்த வளாகமொன்றில் அதிகாலை 2:25 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான இரண்டு ஆண்கள் கண்டெடுக்கப்பட்டு வைத்தியசாலைக்கு விரைவாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
“கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு (Homicide Unit) இந்த விசாரணையைப் பொறுப்பேற்றுள்ளது,” என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். “கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது வெளியிடப்படும்.”
சந்தேகநபர்கள் எவராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து பொலிஸார் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.