வைத்தி்யர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகிறது!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை (18) முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத் திட்டத்தின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாக உள்ளதுடன், நாளாந்த, வாராந்த மற்றும் மாதாந்த அறிக்கைகள் உள்ளிட்ட நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்கு வழங்காமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகச் அச்சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் தெரிவித்தார்.

வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பில் திங்கட்கிழமை (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, வைத்தியர்களுக்கென ‘இலங்கை மருத்துவ சேவை’ எனும் விசேட சேவையை உருவாக்குதல், போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் இடமாற்றக் கொடுப்பனவு தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதாக அமைச்சு உறுதியளித்திருந்தது. எனினும், அந்த உறுதிப்பாடுகளை மீறி சுகாதார அமைச்சு காலம் தாழ்த்தி வருவதால், நாம் போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே பிரதான 6 பணிகளுடன் விலகியிருக்கு தொழிற்சங்க நடவடிகடகைகளை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (18) முதல் 7வது கட்டமாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் தரவுப் புறக்கணிப்புப் தொழிற்சங்க நடவடிக்கையும் ஆரம்பமாகவுள்ளது. இந்நாட்டின் சுகாதாரக் தரவுகளை சீராகப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிகள், இனிவரும் நாட்களில் நோய்த்தடுப்புத் தொடர்பான எந்தவொரு தரவுகளையும் மேலிடத்திற்குச் சமர்ப்பிக்க மாட்டார்கள்.

குறிப்பாக, நாளாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தடுப்பூசிப் பராமரிப்பு மற்றும் டெங்கு தொடர்பான தரவுகள், வாராந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தொற்றுநோய்கள் தொடர்பான அறிக்கைகள் , மாதாந்தம் மற்றும் காலாண்டு ரீதியாகச் சமர்ப்பிக்கப்படும் போசாக்கு மற்றும் சுகாதாரப் புள்ளிவிவர அறிக்கைகள் எதனையும் வழங்கப் போவதில்லை. இதனால் நாட்டின் சுகாதார நிலைமையை மதிப்பிட முடியாத சூழல் ஏற்படும்.

அரசாங்கம் வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தலைக்கணத்துடன் பதிலளிப்பதைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் படிப்படியாகத் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும். தற்போதைய சேவை வீழ்ச்சிக்கும், இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கும் சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். எமது கோரிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுமாயின், இப்போராட்டத்தை மேலும் தீவிரமான கட்டத்திற்குக் கொண்டு செல்ல நாம் தயங்க மாட்டோம் என்றார்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது