வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கான e-BMD திட்டம்

அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட e-BMD கட்டமைப்பு, தற்போது 62 தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.

மேலும் இது ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில் 8,027 நபர்கள் நேரடியாக பயனடைந்துள்ளனர். அரச சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக்கும் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு இணங்க, e-BMD திட்டம் 2025 ஜனவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயற்பாட்டின் 07 நாடுகளில் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்த சேவை 2025 பெப்ரவரி 07ஆம் திகதி முதல் 62 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களை தாம் வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகராலயத்திலிருந்து நேரடியாகப் பெற முடியும். இந்தச் சான்றிதழ்கள் சட்டப்பூர்வ அங்கீகாரத்துடன் வழங்கப்படுவதுடன், இதற்காக இனிமேல் இலங்கைக்கு நேரடியாக வருகை தரவோ அல்லது நீண்ட கால செயல்பாட்டில் ஈடுபடவோ தேவையில்லை.

இந்தச் சேவை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் இங்கிலாந்து, இத்தாலி, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான், மலேசியா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கையர்களுக்குக் கிடைக்கிறது. பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை டிஜிட்டல் மயப்படுத்தி, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களை தலைமை பதிவாளர் திணைக்களத்துடன் நேரடியாக இணைப்பதன் மூலம், ஆவணங்களின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து ஆவணங்களை தயார் செய்வதற்கான காலம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

தலைமை பதிவாளர் திணைக்களத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவால் வழங்கப்படும் நிகழ்நேர (Real-time) தொழில்நுட்ப ஆதரவு காரணமாக, தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களில் செயல்பாட்டு சிக்கல்களைத் தீர்த்து தடையின்றி தொடர்ந்து இச்சேவையை செயல்படுத்த உதவியுள்ளது. வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு