வெசாக் தின விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம் (பதவியா மற்றும் ஹொரோவபொத்தானை), வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதோடு, பின்தங்கிய சமூகங்களுக்கு தரமான கண் சுகாதார சேவைகளின் அணுகலை மேம்படுத்துவதாகும்.

அறுவைச் சிகிச்சையின் போது, யாழ்.போதனா வைத்தியசாலை, கண் மருத்துவ நிபுணர் வைத்தியர் எம். மலரவன், கண் அறுவைச் சிகிச்சை நிபுணர் மற்றும் வெளிக்கண் நோய் நிபுணர் வைத்தியர் எஸ். சுஜீவன், சிரேஷ்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் ரி. திலீபன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

இந்நிகழ்ச்சி ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் இலங்கையைத் தளமாகக் கொண்ட Assist Resettlement and Renaissance (Assist RR) அமைப்பின் பகுதி நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 312 கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

அவற்றில் 215 நோயாளர்கள் (68.9%) வெளி மாவட்டங்களிலிருந்து பங்கேற்றிருந்தனர்.

இத்திட்டம் பொதுமக்களுக்கான கண் சுகாதார சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், பார்வையை மீட்டெடுத்து கண்புரை நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முன்மாதிரி வெளிச்சேவைத் திட்டமாகவும் திகழ்கிறது.

இந்நிகழ்ச்சியின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல், ஐக்கிய நாடுகள் சபையின் பல நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) ஆதரிக்கின்றது. அவற்றில் SDG 1 (வறுமையற்ற உலகம்), SDG 2 (பசியற்ற உலகம்), SDG 3 (நல்ல ஆரோக்கியமும் நல்வாழ்வும்), SDG 8 (கண்ணியமான வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும்), SDG 11 (நிலைத்த நகரங்களும் சமூகங்களும்), SDG 13 (காலநிலை நடவடிக்கை), SDG 16 (அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்) மற்றும் SDG 17 (இலக்குகளுக்கான கூட்டாண்மை) என்பன அடங்கும்.

ஒருங்கிணைக்கப்பட்ட வெளிச்சேவை அணுகுமுறையின் மூலம் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகளவிலான கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதன் மூலம், இத்திட்டம் பார்வையை மீட்டெடுத்து, வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தி, சமூக உள்ளடக்கத்தை ஊக்குவித்ததுடன், மாவட்டங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது.

மேலும், நோயாளர்களின் பயணங்கள் திறமையாக ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து தொடர்பான கார்பன் வாயு (Carbon Emission) வெளியீடுகளும் குறைக்கப்பட்டன.

அதேவேளை, அதிகளவிலான அறுவைச் சிகிச்சை முறைமையானது அறுவைச் சிகிச்சைப் பொருட்கள், அறுவைச் சிகிச்சை கூட வளங்கள் மற்றும் கிருமி நீக்க செயல்முறைகளின் பயன்பாட்டை மேம்படுத்தி, மருத்துவக் கழிவுகளையும் அதனுடன் தொடர்புடைய கார்பன் தடத்தையும் (Carbon Footprint) குறைக்க உதவியது.

இம்முயற்சி உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒருங்கிணைந்த மக்கள் மையப்படுத்தப்பட்ட கண் பராமரிப்பு (Integrated People-Centered Eye Care – IPEC) கட்டமைப்புடன் இணங்குவதோடு, அனைவருக்கும் கண் சுகாதார சேவைகளை உறுதிப்படுத்தும் மற்றும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பை ஒழிக்கும் உலகளாவிய இலக்கிற்கும் பங்களிக்கிறது என யாழ் .போதனா வைத்தியசாலை கண் மருத்துவ நிபுணர் வைத்தியர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.

anura 2026

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தற்போதைக்கு அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல

June 1, 2026

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது, ஒரு தேர்தல் வாக்குறுதியாக இருந்தபோதிலும், தற்போதைய

45

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை; ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிவிப்பு

June 1, 2026

பௌத்த துறவிகளின் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளதாகவும், அது தொடர்பான

709863888_1521841382997076_1374205074410558748_n

வவுனியாவில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

June 1, 2026

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நடைபெவுள்ளது.

sdf

வெசாக் தின விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலையில்!

June 1, 2026

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில்

Screenshot_20260601_013658_YouTube

இலங்கையில் விபத்து: வெசாக் தன்சலவில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மதுபோதையில் வந்த வாகனம் மோதி 6 பேர் பலி!

June 1, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு மீகொட சந்திக்கு அருகே உள்ள வெசாக் தன்சல (Vesak dansala) ஒன்றில் வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின்

photo-collage.png (43)

கனடாவில் ‘தமிழர் சேனையின் பொன்னகவை 50’ இசைப்பேழை வெளியீட்டு விழா!

June 1, 2026

தமிழர் சேனையின் பொன்னகவையை முன்னிட்டு கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தால் இசைப்பேழை வெளியீடு 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா கந்தசுவாமி

3Q3JPJUE7BHN7LHPZLRMNGTNJQ

நோர்த் யார்க்கில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து: ‘பலர் காயம்’ என காவல்துறை தகவல்

June 1, 2026

நோர்த் யார்க்கில் (North York) இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை

toronto police15

ரெக்ஸ்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: காவல்துறை தகவல்

June 1, 2026

ரெக்ஸ்டேல் (Rexdale) அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை

713003786_122206969994330171_8828615223462009648_n

திருடப்பட்ட கிரெடிட் கார்டு மூலம் லாரிகளுக்கு எரிபொருள் நிரப்பிய மோசடி: ஒன்டாரியோ போலீசார் சந்தேக நபர்களைத் தேடுகின்றனர்!

June 1, 2026

திருடப்பட்ட கிரெடிட் கார்டு தகவல்களைப் பயன்படுத்தி, வணிக ரீதியிலான லாரிகளுக்கு (Commercial trucks) தொடர்ந்து எரிபொருள் நிரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட

patrick brown

கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை விரைவாக நாடுகடத்துங்கள்” – கனடா பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன்

June 1, 2026

கனடாவில் கடுமையான குற்றங்களில் ஈடுபடும் கனடா குடியுரிமை பெறாதவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு பிராம்ப்டன் (Brampton) மேயர்

ve

வெசாக் தானசாலை வரிசையில் நின்றவர்களைக் கார் மோதியதில் 6பேர் உயிரிழப்பு: 7 பேர் படுகாயம்!

June 1, 2026

நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tamil

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 1, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்