வீட்டுப் பணியாளராக இத்தாலி சென்ற இலங்கை பெண்ணால் முதியவர் ஒருவர் கொலை!

இத்தாலிக்கு வீட்டு பணியாளரான சென்ற இலங்கை பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரோம் நகரில் வீடொன்றில் முதியவரை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான பெண்ணே முதியரை கொலை செய்துள்ளார்.

பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டதற்காக, முதியவரை மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார்.

உயிரிழந்தவர் 94 வயதான நிக்கோலோ கரோனியா எனும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். உயிரிழந்தவர் இத்தாலிய பொலிஸ் துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தின் போது, நிக்கோலோ கரோனியா கோப்பி தருமாறு தனது வீட்டுப் பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

எனினும் குறித்த பெண் மதுபோதையில் இருந்தமையினால் கோப்பி வழங்க மறுத்து தகராறு செய்துள்ளார். மனமுடைந்த முதியவர் தானே எழுந்து கோப்பி போட முயன்றபோது, ஆத்திரமடைந்த இலங்கைப் பெண் அவரை தாக்கியுள்ளார்.

கைகள், முழங்கைகள் மற்றும் கால்களால் முதியவரின் தலை மற்றும் முகம் என உடல் முழுவதும் பலமாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதியவரை தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொலிஸ் கௌரவச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் மீது துப்பி அவமரியாதை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் முதியவரை படுக்கையில் தள்ளிய நிலையில் தனது அறைக்குச் சென்றுள்ளார். நிக்கோலோவின் மகன் பேப்ரிசியோ தனது தந்தையைத் தொலைபேசியில் அழைக்க முயன்றபோது பலமுறை பதில் கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் பணியாளரான இலங்கை பெண் பதிலளித்தபோது, பின்னணியில் தனது தந்தை வலியால் முனகுவதைக் கேட்டு சந்தேகமடைந்த மகன் உடனடியாக வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, தந்தை மிக மோசமான நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய நிக்கோலோ, ஒகஸ்ட் 27ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பில் ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் திட்டமிட்ட கொலை’ வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரோம் நீதிமன்றம், குற்றவாளியான இலங்கை பெண்ணுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.