விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழா

கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரை, விசேட ஞாபகார்த்த உறை, தபால் அட்டைகள் வெளியீடு

2026 மார்ச் 24ம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு விசேட தபால் அட்டைகளை பழைய மாணவர் சங்கம் ஊடாக வெளியிட 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியக வெளியீடாக இந்த முத்திரை வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்கான முழுமையான நிதி அனுசரணையை 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ளனர்.

கல்லூரியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விசேட ஞாபகார்த்த உறைகள் வழங்கப்படவுள்ளதுடன், கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தபால் அட்டைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

அத்துடன் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்டவர்களிடையே விற்பனை செய்யப்படவுள்ள விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு தபால் அட்டைகள் மூலம் கிடைக்கும் நிதி பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் பாடசாலையான விவேகானந்தா கல்லூரியின் சார்பில் வெளியிடப்படும் முதலாவது முத்திரைப் பதிப்பு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026 மார்ச் 24ம் திகதி வெளியிடப்படவுள்ள இந்த முத்திரை தொடர்பான ஆவணங்களை கல்லூரி அதிபர் மூ. மூவேந்தனிடம் கையளித்த 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற

மாணவர்கள் அதற்கான அனுமதியை பெற்றனர். இந்நிகழ்விற்கு பழைய மாணவர் சங்க செயலாளர் க. முருகானந்தனும் கலந்துகொண்டார்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய