விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு கடற்கரை போல் மாறியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலாப்பொல பகுதியில் மகாவலி ஆற்றின் அணைக்கட்டு உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அதனை அண்டிய பகுதியில் உள்ள 80 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்நிலங்கள் மணலால் நிரம்பியுள்ளது.

வயல் நிலங்களுக்குள் கிட்டத்தட்ட 3 அடிக்கு மேல் மணல் மூடியிருப்பதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும்,மணலை அகற்றுவதற்கு பாரிய செலவு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள மணல் அகழ்வதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.அல்லது விசேட கொடுப்பனவுகள் வழங்கியாவது குறித்த மணலை அகழ்ந்து அகற்ற வேண்டும். அதன் மூலமே மீளவும் இந்நிலத்தில் விவசாயம் செய்யக்கூடிய நிலைமை ஏற்படும்.கமநல சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் இதற்கான உதவிகளை எமக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் பற்றி திருகோணமலை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஷ்ணுதாசனிடம் வினவியபோது

“வயல் காணியில் இருந்து மண்ணை அகழ்வதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அனுமதியுடன் காணி உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்படும்.அகழும் செலவை உரிய விவசாயிகள் மணலை விற்பனை செய்வதன் மூலம் ஈடு செய்து கொள்ள முடியும். தற்போது வீதிகள் சேதமடைந்திருப்பதால் சிறிது தாமதித்து அடுத்த போகத்திற்கு முன்னர் மணல் அகழும் நடவடிக்கையை இலகுவாக மேற்கொள்ள முடியும்”எனவும் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பதிலளித்தார்.

arrest

திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவனையும் காதலியையும் தாக்கிய மனைவி கைது

January 24, 2026

தென்னிலங்கையில் திருமணத்திற்கு புறம்பான உறவினை கொண்டிருந்த கணவன், மற்றும் காதலியை தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். பாதுக்கை பகுதியிலுள்ள வீடொன்றில்

ja

உப்பூறல் கிராமத்தில் ஆறு வீடுகள் யானைகளால் சேதம்

January 24, 2026

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் சனிக்கிழமை (24) அதிகாலை உட்கொகுந்த காட்டு யானைகள் வீடுகளை

pra

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் பிரஜாசக்தி வேலைத்திட்டம்; புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

January 24, 2026

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ தேசிய

red

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலக குற்றவாளி நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்!

January 24, 2026

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் இந்தியாவிலிருந்து

Eng

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

January 24, 2026

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இன்று (23) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து

Jothi

முத்துக்குமாரசுவாமி; தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா

January 24, 2026

தமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

hora

பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன்; பலரை கைது செய்ய உத்தரவு

January 24, 2026

ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய

boat

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

January 24, 2026

இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை அபராதத்துடன் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த டிச.23ம் தேதி எல்லை

fr

ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைது

January 24, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு

US CA

காசா அமைதி வாரியத்திலிருந்து கனடா நீக்கம்: பிரதமர் மார்க் கார்னியுடன் டிரம்ப் மோதல் எதிரொலி

January 24, 2026

காசா மறுசீரமைப்பு மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட ‘அமைதி வாரியம்’ என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில்

in

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு இசை நிகழ்ச்சி!

January 24, 2026

இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரபல பொலிவுட் பாடகி அனுராதா பாட்வாலின் இசை நிகழ்ச்சி கொழும்பு தாமரை கோபுரத்தில்

Inde

“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு!

January 24, 2026

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம்