வாயில்லா ஜீவன்களை துஷ்பிரயோகப்படுத்திக் கொலைசெய்து வந்த கனடா தம்பதி!

கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்ற வழக்கில், பல விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலில் 90 க்கும் மேற்பட்ட பூனைகள், பறவைகள் மற்றும் ஆக்சோலாட்டல் போன்ற விலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 2024 இல், கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

‘Goddess May Barefoot Premium Crush’ என்ற பெயரில் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட டெலிகிராம் குழுவில், விலங்குகளை நசுக்கிக் கொல்லும் காணொளிகள் விற்கப்பட்டதாகவும் பகிரப்பட்டதாகவும் அரச குற்றவியல் சட்டத்தரணி பாய்ட் மெக்கில் வினிபெக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வெறுங்கால்களால் விலங்குகளை நசுக்கிக் கொன்றதாகவும், அதைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும், அதில் பெரும்பாலும் பாலியல் ரீதியான அம்சங்கள் இருந்ததாகவும் மெக்கில் கூறினார்.

இந்தக் காணொளிகள் ‘டார்க் வெப்’பில் வெளியிடப்பட்டதாகவும், விலங்குகளைக் கொல்வதற்கான விலைப் பட்டியலும் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் ஒரு சிறிய எலிக்கு 5 டொலர் முதல் மூன்று பூனைக் குட்டிகள் கொண்ட குடும்பத்திற்கு 180 டொலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

குற்றவாளிகள் இருவரும் தலா ஆறு விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகளின் மின்னணு சாதனங்களைப் பரிசோதித்ததில், விலங்குகள் கொல்லப்படும் பல காணொளிகள் மற்றும் அவர்களின் நடத்தையை அதிகரிக்கத் திட்டமிடுவது தொடர்பான உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட லிமாவின் நாட்குறிப்பில், “தனது கால்களால் உயிர்களைக் கொல்வது எவ்வளவு பிடிக்கும், அது தனக்கு அளிக்கும் இன்பம்” குறித்தும் எழுதப்பட்டிருந்தது.

மே 2024 முதல் ஒக்டோபர் 2024 வரை இந்தக் காணொளிகள் மூலம் சுமார் 2,800 டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

சட்டத்துறையினர் மதிப்பாய்வு செய்த ஆதாரங்களில், 60-க்கும் மேற்பட்ட பூனைகள், ஏழு பறவைகள், ஆறு முயல்கள், ஒரு தவளை மற்றும் ஒரு ஆக்சோலாட்டல் உட்பட 97-க்கும் மேற்பட்ட விலங்குகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

தம்பதிகள் இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்படும் முந்தைய தண்டனை அறிக்கைகள் முடிவடைந்த பிறகு, அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்படுகின்றது.

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய

she

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

November 17, 2025

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி

ukra

 உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு

November 17, 2025

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன்

sau

சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

November 17, 2025

சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

kodda

பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்

November 17, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை

pu

திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே

nama

மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

November 17, 2025

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம்