வழக்கிலிருந்து தப்பிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனி வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே பிரதமர் நெதன்யாகு ஆவார். அவர் இன்னும் எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

இந்த வழக்குகள் நாட்டை பிளவு படுத்துவதாகவும், விசாரணையை உடனடியாக முடிப்பது தேசிய நல்லிணக்கத்தை மீட்டெடுக்க உதவும் என்றும், வீடியோ ஒன்றில் நெதன்யாகு கூறியிருந்தார்.

மேலும், வாரத்துக்கு மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால், தன் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் அலுவலகத்தில் பொது மன்னிப்பு கோரிக்கை, பிரதமர் அலுவலகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சட்ட மற்றும் நீதித்துறை கருத்துக்களை பெற்ற பின், பொறுப்புடனும், நேர்மையுடனும் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் அதிபர் ஐசக்குக்கு எழுதிய கடிதத்தில், நெதன்யாகுவுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார் நெதன்யாகு.

பொதுவாக இஸ்ரேலில் தண்டனை வழங்கப்பட்ட பின்னரே மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.

இருப்பினும், குற்றம் நிரூபிப்பதற்கு முன்பே மன்னிப்பு வழங்குவது அரிதான மற்றும் விதிவிலக்கான நடவடிக்கையாகும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும் எதிர்க்கட்சியினர் மற்றும் சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், வருத்தம் தெரிவிக்காமலும் மன்னிப்பு கோருவது சட்ட விரோதமானது என எதிர்க்கட்சி தலைவர்கள் வாதிடுகின்றனர்.

pere

பல்கலை ஊழியர்கள் போதைப்பொருள் வியாபாரத்துக்கு ஒத்துழைப்பு?

March 14, 2026

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கலைப்பீட மூன்றாம் வருட மாணவனுக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இருவர் ஒத்துழைப்பு

ddd

வட மாகாண ஆளுநரால் சாவகச்சேரி நகர சபை விசேட தனிநபர் விசாரணை

March 14, 2026

நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது என சட்டத்தரணி குருபரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர

var

வர்த்தக நிலையத்தில் தீ  

March 14, 2026

கொழுப்பு – ஹட்டன் வீதி, கரவனலை நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சனிக்கிழமை (14) அன்று திடீர் தீ பரவல்

nama

தென்னிந்தியாவிலேயே எனக்குப் பிடித்த நடிகர் விஜய் – நாமல் ராஜபக்ஷ

March 14, 2026

தென்னிந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், தான் அவருடைய ரசிகர்களில் ஒருவன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்

he

மே மாதம் வரை கடும் வெப்பம்

March 14, 2026

தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

onli

3 முதல் 5 வயது சிறுவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்குத் தடை?

March 14, 2026

3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு

donadltrumps

டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

March 14, 2026

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி

4

ஐக்கிய மக்கள் சக்தி அரசு பற்றி கடும் விமர்சனம்

March 14, 2026

தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற

murder

பெண் கழுத்தறுத்துக் கொலை

March 14, 2026

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை

jud

கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

March 14, 2026

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை

thaya

பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன்

March 14, 2026

சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

no

வடமராட்சி புலோலியில் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கென குழு அமைப்பு

March 14, 2026

ஜனாதிபதியின் முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு