வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான மையம் மீண்டும் திறப்பு

வெரிட்டேரிசர்ச் (Verité Research) நிறுவனம் தனது முன்னோடி ‘வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கானமையத்தின்’ (Budget Proposals Hub) இரண்டாவது பதிப்பைத் தொடங்கியுள்ளதுடன், 2027 தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகத் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு நாட்டின் மக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாகக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி கண்ட இத்திட்டம், பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தொடரப்படுகிறது.

கடந்த ஆண்டில் இலங்கை இலவங்கப் பட்டையிலிருந்து ஔடதப் பொருட்களைத் தயாரிக்கும் தேசிய அளவிலான வேலைத்திட்டம் முதல் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் கழிவறைகளைக் கட்டுவது வரையிலான பல்வேறுபட்ட யோசனைகள் இதன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

சர்வதேச மதிப்பீடுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் குறைபாட்டை இம்மையம் நிவர்த்தி செய்கின்றது.
2025 ஆம் ஆண்டின் திறந்த வரவு செலவுத் திட்டக் கணிப்பீட்டில் (Open Budget Survey 2025), பொதுமக்களின் பங்களிப்புத் தொடர்பாக இலங்கை 100 க்கு 9 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
உலகளவில் மிகவும் பலவீனமான செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படும் இது, பொதுமக்களின் பணம் எவ்வாறு திரட்டப்படுகின்றது மற்றும் செலவிடப்படுகின்றது என்பதன் வழிமுறைகளுடன் இலங்கையர்கள் இணையும் வழிகளில் உள்ள பாரிய பலவீனங்களைப் பிரதிபலிக்கின்றது.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான மையமானது (BPH) பொதுமக்களின் பங்களிப்பிற்காக மூன்று வழிகளை வழங்குகின்றது:
பங்கேற்பாளர்கள் தளத்தின் அதிகாரப்பூர்வ வரவு செலவுத் திட்ட முன்மொழிவு படிவத்தைப் பயன்படுத்தி, BPH ஊடாக முழுமையான முன்மொழிவொன்றைச் சமர்ப்பிக்க முடியும்.

பங்கேற்பாளர்கள் BPH இல் பதிவேற்றுவதற்காகத் தமது முன்மொழிவுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்; அத்துடன் அவற்றை முழுமையான முன்மொழிவாக உருவாக்குவதற்குத் தேவையான உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் BPH இல் பதிவேற்றப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு வாக்களிக்க முடியும். இது ஜனநாயகக் குரலையும் பொதுமக்களின் பங்களிப்பையும் அதிகரிக்கிறது.

வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான மையமானது (Budget Proposals Hub) publicfinance.lk என்ற இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முழுமையாகக் கிடைக்கப்பெறுகின்றது.

2027 வரவுசெலவுத் திட்டத்திற்கான பொதுமக்களின் முன்மொழிவுகள் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலதிக தகவல்களுக்கு அல்லது இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கு pfp@veriteresearch.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ள முடியும்.

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான