வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை!

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ எனும் அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11 ஆம் திகதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டு, கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாகச் சேதப்படுத்தியது. இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ உடன் நேரில் பார்வையிட்டார்.

சோதனைக்குப் பிறகு கிம் ஜாங் உன் கூறுகையில், “நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது” என்று எச்சரித்தார்.

இதையடுத்து, அமெரிக்கா – தென்கொரியா நடத்தும் வருடாந்திர இராணுவ பயிற்சியை கண்டித்து, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடலில் விழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனை மதிப்பிடவும், ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும், ஜப்பான் பிரதமரின் அவசர முகாமைத்துவ மையம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது.

வடகொரியாவின் இந்த சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ தொடங்கியுள்ளன, மற்றும் வடகொரிய-தென் கொரியா-அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம், உலக அரங்கில் கொரியாவின் பாதுகாப்பு நிலை மற்றும் வடகொரியா – தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இராணுவ உறவுகள் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளதை காட்டுகிறது.

donadltrumps

டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை!

March 14, 2026

ஈரான் மீதான யுத்தம் காரணமாக பிராந்தியத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நம்பகமான எரிசக்தி

4

ஐக்கிய மக்கள் சக்தி அரசு பற்றி கடும் விமர்சனம்

March 14, 2026

தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற

murder

பெண் கழுத்தறுத்துக் கொலை

March 14, 2026

இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை

jud

கிளிநொச்சியில் போட்டியிட்டவர்களில் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

March 14, 2026

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் போட்டியிட்ட 685பேரில் 606பேர் வரவு செலவு அறிக்கைகளை

thaya

பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மௌனம் காப்பது ஏன்

March 14, 2026

சபாநாயகர் மற்றும் அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

no

வடமராட்சி புலோலியில் போதை ஒழிப்பு நடவடிக்கைக்கென குழு அமைப்பு

March 14, 2026

ஜனாதிபதியின் முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு

mano

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்?

March 14, 2026

போரை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்ததென்றால், தமிழ் மக்களின் ஆதரவைப்

net

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்?

March 14, 2026

உலகளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றான Netflix தனது சில பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை

thes

மட்டக்களப்பில் பெண்களின் பாரிய கவனயீர்ப்புப் பேரணி!  

March 14, 2026

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவினை செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்யெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் பெண்களின் உரிமையினை வலியுறுத்தியும் மட்டக்களப்பு கவன ஈர்ப்பு

th

பௌத்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் 108 புத்தர் சிலைகள் அன்பளிப்பு!  

March 14, 2026

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை

ont

நவீனப்படுத்தப்படுகின்றது ஒன்டாரியோ மாகாண தகவல் அறியும் உரிமைச் சட்டம்?

March 14, 2026

ஒன்டாரியோ மாகாண அரசு, தகவல் அறியும் உரிமை (FOI) சட்டத்தை “நவீனப்படுத்தும்” பெயரில் மாற்ற முன்வந்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு

55

கனடா – அல்பர்டா ஆசிரியர்கள் “பணிக்கு திரும்பச் செல்லும்” சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த கோரிக்கை நிராகரிப்பு

March 14, 2026

டந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அல்பர்டா பள்ளி ஆசிரியர்களை மீண்டும் பணிக்கு திரும்பச் செய்யத் திணித்த மாகாண சட்டத்தை