முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் 60 வரையான காணி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து காணி உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (27) முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவு மற்றும் தேவிபுரம், அ., ஆ.பகுதி மக்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது இது தொடர்பான மகஜரினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனிடம், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடமும் கையளித்துள்ளார்கள்.

இந்த மக்கள் அரசாங்கத்தினால் அரை ஏக்கர் காணி கொடுத்தார்கள். அதற்குள் வீடும் தென்னப்பிள்ளையும் வைக்க காணி முடிந்துள்ளது. இந்த நிலையில் எங்களின் வாழ்வாதரத்திற்காக எங்கள் காணியுடன் அல்லது அருகில் உள்ள மந்துக்காடாக கிடந்த காணிகளை சீர்செய்து துப்பரவு செய்து எங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்காக சீர்செய்து பயிர் கொடிகளை நாட்டிவைத்துள்ளோம் வான்பயிர் செய்துள்ளோம் மரமுந்திரிகை செய்துள்ளோம்.

இந்நிலையில் இந்த காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பிரதேச செயலகத்தினால் அ. படிவம் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் சிலர் 15 ஏக்கர் வரையில் காணியினை பிடித்து ஆவணம் போட்டுள்ளார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மக்களை கருத்தில் எடுக்கவில்லை இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருடன் கதைத்துள்ளோம். காணி ஆணையாளரிடம் கதைத்துள்ளோம். இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம் ஜனாதிபதி செயலத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம் இதுவரையும் எந்த பதிலும் இல்லை.

இந்த நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த காணிப்பிரச்சினை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலத்திற்கு உட்பட்ட கோம்பாவில் தேவிபுரம்,சுதந்திரபுரம் போன்ற மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளில் மிக அதிகமாக அரச காடுகளை வெட்டி காணிகளை அடத்தாக பிடிக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

போர்காலத்திற்கு முதல் அல்லது கடந்தகாலத்தில் கொடுக்கப்பட்ட அரசாங்கத்தினால் சட்டரீதியாக கொடுக்கப்பட்ட காணிகளோ அல்லது அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளுக்கும் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்கவில்லை மக்களின் பளைய காணிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் அடாத்தான முறையில் காணியினை கையகப்படுத்தி பாவித்து வருகின்றார்கள் ஒரு ஏக்கர் தொடக்கம் 37 ஏக்கர் வரை தனிநபர்கள் இவ்வாறு கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இதில் அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள் வியாபாரிகள் இருக்கின்றார்கள் மணல் விற்பனை செய்பவர்கள் இருக்கின்றார்கள் சமூகமட்ட அமைப்புக்களில் உள்ளவர்கள்இருக்கின்றார்கள் சில ஏழைகளும் இருக்கின்றார்கள் அவர்களை நாங்கள் அழைத்து கதைத்தவேளை அனைவருக்கும் ஏற்கனவே வேறு காணிகளுக்கு போமிட் கொடுக்கப்பட்டுள்ளது

ஆகவே ஏற்கனவே காணிகள் வைத்திருக்கும் நபர்கள் மேலதிகமாக காணியினை பிடித்து வைத்திருக்கின்றார்கள் ஒரு நபர் ஏதும் காணியில்லாமல் நாங்கள் இதில் குடியிருக்கின்றோம் என்று சொல்லவில்லை இவ்வாறானவர்கள் அனைவருக்கும் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1,700 நபர்கள் இதுவரைக்கும் காணி இல்லாத மக்கள் இருக்கின்றார்கள் அத்துடன் நாங்கள் முதலீட்டினை ஊக்கிவிக்கின்றோம் பிரதேசத்தில் பலர் வேலை இல்லாத நிலை காணப்படுகின்றது.

கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு செல்கின்றார்கள் நாங்கள் முதலீட்டிற்காக ஊக்கிவிக்கின்றோம். யாராவது முதலீடு செய்யுங்கள் என்று காணிகளை அடையாளப்படுத்தியுள்ளோம் அந்த காணிகளையும் பிடிக்கின்றார்கள்.

எல்லோருக்கும் வாழ்வாதாரம் என்று காணிகளை கொடுப்பதாக இருந்தால் மொத்த காட்டினை துப்பரவு செய்தாலும் காணாது தொழில் முயற்சியாளர்களுக்கும் காணி இல்லாமல் விண்ணப்பம் செய்த மக்களுக்கும் காணி கொடுக்கவேண்டிய தேவை உள்ளது.

இதுவரைக்கும் 66 வழக்குகள் போடப்பட்டுள்ளது நான்கு வழக்குகள் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்னும் அதிகளவான காணிகளை வெட்டிவைத்துள்ள நபர்கள் இன்னும் 100 வழக்குதாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு குடிமகனும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.