மீள்குடியேற்றத்துக்காக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 2500 வீடுகள் – சுசில் ரணசிங்க

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைப்பெறவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சுக்கு மீண்டெழும் செலவுகளுக்காக 70 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீள் அறவிடப்படாத திட்டத்தின் கீழ் வீடமைப்புக்காக 10 இலட்சம் ரூபா வழங்குவது தொடர்பிலும் எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வரவு – செலவுத் திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பு மற்றும் நீர்பாசனத் திட்டம் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து வீடமைப்பு மற்றும் நீர்பாசனத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்தேன். யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மீள்குடியேற்றத் திட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைப்பெறவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் இந்த நிதி ஒதுக்கிடு

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள

glob

நாட்டைக் கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் கைகோருங்கள் – அனைத்துலகத் தமிழர் பேரவை

December 6, 2025

பேரனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு, உலகத் தமிழர் சமூகத்தின் ஒருங்கிணைந்த மனிதாபிமான உதவிகள் இன்றியமையாதவையாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகம்

iya

அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு – சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – காவிந்த ஜயவர்தன

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த

Harini-Amarasuriya

பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை!

December 6, 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச

tha

மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை

December 6, 2025

மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5)

bam

பம்பலப்பிட்டியில் விபத்து : 5 பேர் காயம்

December 6, 2025

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

mal

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் மாலைதீவினால் நன்கொடை

December 6, 2025

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாலைதீவினால்

ifj_1

அவசரகாலச்சட்ட ம் தொடர்பான பிரதியமைச்சர் கருத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்கள் பேரவை கண்டனம்!

December 6, 2025

ஜனாதிபதியை விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலச்சட்ட விதிகள் பிரயோகிக்கப்படும் என்ற பிரதியமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்து தொடர்பில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும்

photo-collage.png (2)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை பற்றிய விழிப்புணர்வு

December 6, 2025

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அதன் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 16 நாட்கள் செயற்பாட்டு திட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில்