மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் அதிகளவில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மின்சார உற்பத்திக்காக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை வழக்கத்திற்கு மாறான முறையில் திறந்துவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ நுகேொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதனை வெளிப்படுத்தினார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, வெப்ப மின் உற்பத்தி குறைந்துள்ளதைக் ஈடுகட்டும் ஒரு தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார். கடந்த மார்ச் 24ஆம் திகதி விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“தரம் குறைந்த நிலக்கரியால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டீசல் மூலம் மின்சாரம் தயாரிக்க அதிக செலவாகும் என்பதால், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தும்போது ஏற்படும் எதிர்ப்பைத் தவிர்க்க அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்காக கடல் மட்டத்திலிருந்து 422 மீற்றர் மட்டத்தில் பராமரிக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவால் இந்த மட்டம் குறையக்கூடும்” என அவர் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்காக அதிக நீர் பயன்படுத்தப்படுவதால், கண்டி, குண்டசாலை மற்றும் திகன ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பலகொல்ல நீரேந்து நிலையம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனால் சுமார் 17,000 நீர் இணைப்புகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், நாளாந்தத் தேவையான 12,000 கன மீற்றர் நீருக்குப் பதிலாக 500 கன மீற்றர் மாத்திரமே விநியோகிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

மேலும், பல்லேகல முதலீட்டு வலயத்திலுள்ள சில தொழிற்சாலைகள் நீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மூடப்பட்டதாகவும், இதன் விளைவாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்தெம்பே நீர்த்தேக்கங்களின் நீர் முகாமைத்துவத்தில் சிக்கல் ஏற்பட்டு விவசாயமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்த துமிந்த நாகமுவ, இந்த முட்டாள்தனமான முடிவை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்