மார்ச் 3 இல் அமைதிப் போராட்டம்!

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி 2,300க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் அமைதி வழி போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் நெவில் விஜேதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,

2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சேவையில் இணைந்த கிராம உத்தியோகத்தர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இவர்கள் சேவையில் இணைந்த காலம் முதல் தொடர்ச்சியாக அநீதிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், புதிய சேவை யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் இந்த நிலைமை மேலும் தொடர்கிறது.

கடந்த காலங்களில் குறித்த விடயம் தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் பல முறை கலந்துரையாடப்பட்டு இருந்தாலும், இதுவரை முறையான தீர்வுகள் கிடைக்கவில்லை. மாறாக கால தாமதப்படுத்தும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டது.

இந்த அமைதிப் போராட்டமானது எதிர்வரும் 3 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு ஏனைய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் சங்கங்களும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

மேலும், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதியுடன் குறித்த ஆண்டில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர்கள் 17 வருட சேவையை பூர்த்தி செய்யவுள்ளனர். தற்போது சேவையிலுள்ள கிராம உத்தியோகத்தர்களில் சுமார் 25 சதவீதமானோர் இந்தப் பிரச்சினையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு தகுந்த கவனம் செலுத்தப்படாவிட்டால், வருகின்ற காலங்களில் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு கிராம உத்தியோகத்தர் குழுவினர் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்