மலையக புகையிரத பாதை; பேராதனை பால புனரமைப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு?

மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ரம்புக்கனை மற்றும் கடுகண்ணாவை இடையிலான புகையிரத பாதையை சீரமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு இதுவரை எவ்வித திட்டமும் இல்லை எனவும் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், மண்சரிவினால் சேதமடைந்த மலையக புகையிரத பாதையின் பேராதனை புகையிரத பாலத்தை புனரமைக்க அரசாங்கம் தலையிட்டு புதிய இரட்டைப் பாலமொன்றை அமைக்க முதலில் முன்மொழிந்த போதிலும், பின்னர் பழைய பாலத்தையே மீண்டும் புனரமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், 2026 ஏப்ரல் மாதத்தில் கண்டி வரையான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் (CECB) அரசாங்கத்தின் தலையீட்டின் பேரில் புனரமைப்புப் பணிகளில் இணைந்திருந்தாலும், அவர்களால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பணிகள் புகையிரத பொறியியல் தொழில்நுட்பக் குழுவினால் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பேராதனை புகையிரத பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, இப்பாலத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மீண்டும் ஒரு அறிக்கையைக் கோருவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போதைய புகையிரத பொது முகாமையாளரின் சில செயற்பாடுகளே இவ்வாறான சிக்கல்கள் ஏற்படக் காரணம் என அச்சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

புகையிரத பொது முகாமையாளர் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

புகையிரத திணைக்களம் இலாபமடைவதாகக் காட்டுவதற்காக, புகையிரத சேவைகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளைக் குறைக்க தற்போதைய பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

திணைக்கள அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியாமை மற்றும் ஏனைய அதிகாரிகளின் ஆலோசனைகளை பொது முகாமையாளர் செவிமடுக்காமை காரணமாக, தற்போதைய அரசாங்கம் அபகீர்த்திக்கு உள்ளாவதுடன் புகையிரதப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதைகளை மீண்டும் புனரமைப்பதில் இவ்வாறான நிர்வாகச் சிக்கல்கள் பாரிய தாக்கத்தை செலுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, புகையிரத சேவையை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கு, புகையிரத திணைக்களத்தில் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ள பொறியியலாளர்களான முன்னாள் பொது முகாமையாளரைக் கொண்ட குழுவொன்றை நியமித்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அச்சங்கம் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது