அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சற்று முன்னர் அலி கமெனி வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்பை குற்றவாளி என குறிப்பிட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “ஈரானிய தேசத்தின் மீது இழைத்த உயிரிழப்புகள், சேதங்கள் மற்றும் அவதூறுகள் காரணமாக அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாக நாங்கள் கருதுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகளை நான் அனுமதிக்கவும் மாட்டேன், ஏற்கவும் மாட்டேன், தடை செய்கிறேன். இதனைச் செய்பவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், வெளியே இருப்பவர்களாக இருந்தாலும், எங்கு இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாததே” என குறிப்பிட்டுள்ளார்.