பௌத்த கட்டமைப்பை சிதைத்து அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன – தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் கண்டனம்!

த்த மதத்தின் தூண்களாகக் கருதப்படும் பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள் மற்றும் உபாசிகைகள் ஆகியோரின் அடிப்படையை சிதைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தவறான கொள்கை கொண்ட சக்திகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அதன் ஒருங்கிணைப்பாளர் எலபத்கம ஞானரத்தன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

எமது கலாசாரத்தின் அடிப்படைத் தத்துவங்களுடன் ஒன்றிணைந்துள்ள பௌத்த கட்டமைப்பை சிதைத்து, அதனை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, அண்மையில் உடுமளுவ விகாரையின் தலைமை தேரர் தொடர்பில் இடம்பெற்ற சம்பவத்தை மையப்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் சில, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிக்குகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. இது பௌத்த சாசனத்துக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையாளும் வகையில், சங்க சொத்துக்கள் பராமரிப்புச் சபை என்ற பெயரில் புதிய குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை ஒன்றைக் காண முடிகிறது. 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ளன. இவற்றை மீறி, சங்கத்தின் சொத்துக்களை பராமரிப்புச் சபையிடம் ஒப்படைத்து, அவற்றை இல்லறத்தவர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க முயற்சிப்பது ஒரு பாரிய சதித்திட்டமாகும்.

பொலன்னறுவை நிசங்கமல்ல மன்னர் காலத்தில், சங்க சொத்துக்களை இல்லறத்தவர் பயன்படுத்தினால், அவர்கள் நாய் மற்றும் காகங்களாகப் பிறப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுக்கள் எமது கலாசார விழுமியங்களை எடுத்தியம்புகின்றன. அத்தகைய சொத்துக்களை இல்லறத்தவர் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளுவது பாரிய பிழையாகும்.

சங்க சொத்துக்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின், முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்று உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, இவ்வாறான சதித்திட்டங்களை முன்னெடுப்பது சாசனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும். பிக்குகள் குற்றவாளிகள் என இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சில சக்திகள் அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து சமூக மட்டத்தில் அவமானப்படுத்துகின்றன.

1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தி சாசனத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எனவே, ஜனாதிபதி மற்றும் பௌத்த சாசன அமைச்சின் பொறுப்பிலுள்ள அதிகாரிகள், பௌத்த மரபுரிமைகளையும் சாசனத்தையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புகழ்பெற்ற பௌத்த பாடசாலைகளை மதச்சார்பற்றதாக்கும் மறைமுகமான சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. காட்டை அழிப்பதற்கு அதே காட்டிலுள்ள மரத்தையே பயன்படுத்துவது போல, பிக்குகளையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சாசனத்தை அழிக்க முனையும் தவறான சக்திகளின் வலைகளில் எமது இளம் பிக்குகள் சிக்கி விடக்கூடாது.

எனவே, அனைத்து சங்கத்தினரும் சாசனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிணைய வேண்டும் எனவும், இளம் பிக்குகள் இவ்வாறான சதித்திட்டங்களைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்