பௌத்த கட்டமைப்பை சிதைத்து அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன – தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் கண்டனம்!

த்த மதத்தின் தூண்களாகக் கருதப்படும் பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள் மற்றும் உபாசிகைகள் ஆகியோரின் அடிப்படையை சிதைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தவறான கொள்கை கொண்ட சக்திகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அதன் ஒருங்கிணைப்பாளர் எலபத்கம ஞானரத்தன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

எமது கலாசாரத்தின் அடிப்படைத் தத்துவங்களுடன் ஒன்றிணைந்துள்ள பௌத்த கட்டமைப்பை சிதைத்து, அதனை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, அண்மையில் உடுமளுவ விகாரையின் தலைமை தேரர் தொடர்பில் இடம்பெற்ற சம்பவத்தை மையப்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் சில, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிக்குகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. இது பௌத்த சாசனத்துக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையாளும் வகையில், சங்க சொத்துக்கள் பராமரிப்புச் சபை என்ற பெயரில் புதிய குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை ஒன்றைக் காண முடிகிறது. 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ளன. இவற்றை மீறி, சங்கத்தின் சொத்துக்களை பராமரிப்புச் சபையிடம் ஒப்படைத்து, அவற்றை இல்லறத்தவர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க முயற்சிப்பது ஒரு பாரிய சதித்திட்டமாகும்.

பொலன்னறுவை நிசங்கமல்ல மன்னர் காலத்தில், சங்க சொத்துக்களை இல்லறத்தவர் பயன்படுத்தினால், அவர்கள் நாய் மற்றும் காகங்களாகப் பிறப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுக்கள் எமது கலாசார விழுமியங்களை எடுத்தியம்புகின்றன. அத்தகைய சொத்துக்களை இல்லறத்தவர் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளுவது பாரிய பிழையாகும்.

சங்க சொத்துக்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின், முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்று உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, இவ்வாறான சதித்திட்டங்களை முன்னெடுப்பது சாசனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும். பிக்குகள் குற்றவாளிகள் என இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சில சக்திகள் அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து சமூக மட்டத்தில் அவமானப்படுத்துகின்றன.

1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தி சாசனத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எனவே, ஜனாதிபதி மற்றும் பௌத்த சாசன அமைச்சின் பொறுப்பிலுள்ள அதிகாரிகள், பௌத்த மரபுரிமைகளையும் சாசனத்தையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புகழ்பெற்ற பௌத்த பாடசாலைகளை மதச்சார்பற்றதாக்கும் மறைமுகமான சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. காட்டை அழிப்பதற்கு அதே காட்டிலுள்ள மரத்தையே பயன்படுத்துவது போல, பிக்குகளையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சாசனத்தை அழிக்க முனையும் தவறான சக்திகளின் வலைகளில் எமது இளம் பிக்குகள் சிக்கி விடக்கூடாது.

எனவே, அனைத்து சங்கத்தினரும் சாசனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிணைய வேண்டும் எனவும், இளம் பிக்குகள் இவ்வாறான சதித்திட்டங்களைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

NT5WBSMVIZCQFAUVDLDAPULJTM

நோர்த் யார்க்கில் ‘வீட்டின் அருகிலேயே’ நபர் ஒருவர் சுட்டுக் கொலை (Formal Tamil)

May 30, 2026

நோர்த் யார்க்கில் (North York) உள்ள தனது வீட்டின் அருகிலேயே 27 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

arrestt

பிராம்ப்டன் கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

May 30, 2026

பீல் பிராந்தியம் (Region of Peel) – பிராம்ப்டனில் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஒரு நபரை 21-வது

acc 12

மிசிசாகா 410 நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்து

May 30, 2026

மிசிசாகாவில் சனிக்கிழமை அதிகாலை, டெரி சாலைக்கு (Derry Road) அருகே, நெடுஞ்சாலை 410-இன் தெற்கு திசை பாதையில் (Highway 410

acc 12

ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நிகழ்ந்த வாகன மோதலில் ஒருவர் பலி, குழந்தை கவலைக்கிடமான நிலையில் அனுமதி

May 30, 2026

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை விமானம் (Airlifted) மூலம் ‘சியோ’ (CHEO) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிபிசி நியூஸ்

default (29)

பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது: சர்வதேச தீர்ப்பாயம்

May 30, 2026

னடா அரசாங்கம் ‘பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உத்தியை நிலைநிறுத்தியுள்ளது’ என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஹோலி கப்ரேரா ·

w-412,h-232,imgid-01j20fp4ps4b0d77k9mwf2r578,imgname-free-bus-pass-1

“சீருடை இருந்தால் போதும்; காசு தேவையில்லை!” – ஜூன் 4-ல் பள்ளி திறப்பையொட்டி அரசு பஸ்களில் இலவசப் பயணத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி உத்தரவு!

May 30, 2026

சென்னை: “ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் எவ்விதக் கட்டணமும்

Madras-High-Court

“அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டாம்!” – திருப்பரங்குன்றம் நடை திறப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் உக்கிர அறிவுறுத்தல்!

May 30, 2026

சென்னை: “மாநிலத்தில் உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபி-க்களுக்காகக் கோவில்களில் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை”

screenshot-2026-05-29t121805-486-down-1780037569

“துடுப்பு இல்லாத படகு போல அல்லாடுகிறது அதிமுக!” – எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதம் அனுப்பி மேனாள் எம்பி இளவரசன் அசுர வேக அதிரடி!

May 30, 2026

சென்னை: “புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் காலம் காலமாக உண்மையாக உழைத்த விசுவாசத் தொண்டர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை;

ctr-nirmal-kumar (1)

“இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல்; நிரந்தர விடுதலைக்கு அசுர வேக மூவ்!” – போக்சோ குற்றவாளிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் உக்கிர எச்சரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாக வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கப் போர்க்கால அடிப்படையில் அதிரடி

dailythanthi_2026-05-30_kipuhmob_15

“10 மாதங்களுக்குப் பின் பாய்ந்த ஆக்ஷன்!” – கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் அதிரடி கைது; தவெக அரசுக்குத் திருமாவளவன் மாஸ் பாராட்டு!

May 30, 2026

சென்னை: “நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும்,

vikatan_2026-02-16_hc251k86_6369f12560b16

“தவறு செய்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!” – காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அசுர வேக முறைகேடு புகார்; சொந்தக் கட்சி மீதே ஜோதிமணி எம்பி அதிரடிப் போர்க்கொடி!

May 30, 2026

சென்னை: “நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப் பெரிய

1200-675-26777881-thumbnail-16x9-admk (1)

“அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!” – குதிரை பேர விமரிசனத்தோடு அதிருப்தியாளர்களுக்கு அசுர வேக எச்சரிக்கை விடுத்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

May 30, 2026

திருவண்ணாமலை: “கோடிக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் பேரியக்கமான அதிமுக-வை யாராலும் வீழ்த்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது; பதவி ஆசைக்காகவும்