போர்வீரர்கள் எதிர்கொள்ளும் நிலப் பிரச்சினைகள்…

போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்நோக்கும் நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து, விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் செவ்வாய்கிழமை (24) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் போர்வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணியகத்தினால் அடையாளம் காணப்பட்ட நிலப் பிரச்சினைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போர்வீரர்கள் நாட்டின் இறையாண்மையையும் நிலையான அமைதியையும் பாதுகாக்கச் செய்த அர்ப்பணிப்பை மதித்து, அரசாங்கம் நில சீர்திருத்த ஆணைக்குழு மூலமாக நிலங்களை வழங்கும் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பில் அமல்படுத்தியுள்ளது.

அதற்கமைய ஹோமாகம பிரதேச செயலாளர் பிரிவின் மீகொடவத்த மற்றும் பலெந்தகொட, மத்துகம பிரதேச செயலாளர் பிரிவின் யடடோலவத்த, மொனராகலை பிரதேச செயலாளர் பிரிவின் மதுருகெட்டியவத்த ஆகிய பகுதிகளில் நிலப்பகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களுடன் தொடர்புடைய நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இக்கூட்டத்தில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டன.

போர்வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் உரிமையை உறுதிப்படுத்த தேவையான சட்டப்பூர்வ ஆவணங்கள் வழங்குவதை விரைவுபடுத்துதல், மூன்றாம் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற விவசாயம் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இங்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர், அரசாங்க தலையீட்டின் மூலம் வழங்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக போர்வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்), நிலா சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிராந்திய பணிப்பாளர்கள், மேலும் இராணுவ போர்வீரர் சேவைகள் மற்றும் மறுவாழ்வு பிரிவின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு