ஈரான் போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடாக நாளொன்றுக்கு சுமார் 138 கப்பல்கள் பயணித்த போதிலும், தற்போது அந்த எண்ணிக்கை 05 அல்லது 06 ஆகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது முன்னைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 95 சதவீத வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஈரானியப் படைகள் தொடர்ச்சியாகக் கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் 100 கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்துள்ளன.
இவ்வாறு பயணித்த கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு ஈரானுடன் தொடர்புடையவை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சில கப்பல்கள் இன்னும் பயணித்துக் கொண்டிருந்தாலும், போர்ச் சூழல் காரணமாக உலகின் மிகவும் பரபரப்பான இந்த கடல் வழிப்பாதை தற்போது பெருமளவில் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.